தமிழகத்தில் 2018ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் விருது பெற வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஜெயந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, 2018ம் ஆண்டு தமிழகத்தில் சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் விருது பெறுவதற்கான கால அளவு 15-4-2019 தேதியில் இருந்து 30.6.2019 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை, தரைதளம், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
|