மனித உரிமை குறித்து ஜெனிவா,ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய மதுரை மாணவி
மதுரை மாவட்டம் கார்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரேமலதா(22) என்ற மாணவி ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை குறித்து உரையாற்றி உள்ளார். தற்போது இளங்கலை படிப்பை முடித்து சட்டக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்துள்ள பிரேமலதா அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த வேளையில் மனித உரிமைக் கல்வியையும் படித்திருக்கிறார். அவ்வேளை 'A path to dignity'என்ற குறும்படத்தில் மனித உரிமைக் கல்வியின் அவசியத்தைப் பற்றி பேசியிருக்கிறார். இதன் மூலமாகவே பிரேமலதா ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
மதுரை திரும்பியுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியது புதிய அனுபவமாக இருந்ததாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் அவரது குறும்படம் திரையிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மனித உரிமைக் கல்வியை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் கற்பிக்க வேண்டும் என்று கூறுகிறார் பிரேமலதா.
ஐக்கிய நாடுகள் சபைக்கு பயணித்துள்ள பிரேமலதா அரசுப் பள்ளியில் தமிழ்மொழியாகிய தாய்மொழியில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்மொழிக் கல்வி சிந்தனைச் செழுமையைத் தரும் என்பதில் ஐயமில்லை.
|