பெயர் எழுதும்போது முன்னெழுத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும்,சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
தாய்மொழி தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தினை (Initial) ஆங்கிலத்தில் எழுதும் வழக்கமே அதிகமாக இருக்கிறது. மொழி விழிப்புணர்வு கொண்ட ஒரு சிலரே தங்கள் பெயரின் முன் எழுத்தை தமிழில் எழுதுகின்றனர்.
சட்டப்பேரவையின் உரையின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இதனைச் சுட்டிக்காட்டி தமிழிழ் பெயரை எழுதும்போது முன் எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி,கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களிலும் முன் எழுத்தினை தமிழில் எழுதும் நடைமுறையினை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் தமிழிலேயே முன் எழுத்தினை எழுத ஊக்குவிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.
|