தமிழர்கள் மொழிக்காக முதலில் வருபவர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைய உள்ள புதிய நீதிமன்றக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டார். முதல்வர் ஸ்டாலினை அடுத்து உரையாற்றிய ரமணா அவர்கள் 'தமிழர்கள் மொழி அடையாளம் மிக்கவர்கள், மொழிக்காக எப்போதும் முதலில் வருபவர்கள்' என்று கூறினார்.
மேலும் நீதிபதியாக வருவதற்கு மொழி, இனம் போன்றவை தடையாக இருக்கக்கூடாது என்று கூறினார். தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டதற்கு பதிலாக,உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதற்கு சிக்கல்கள் இருக்கின்றன, தொழில்நுட்ப வசதியினை கொண்டு மாநில மொழிகளை பயன்படுத்துவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ரமணா கூறினார்.
|