தமிழகம் தாண்டி விரியும் தொல்லியல் துறையின் ஆகழாய்வு
கேரள மாநிலம் பட்டணம்,ஆந்திராவில் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு,ஒடிசாவின் பாலூர் ஆகிய பகுதிகளில் தமிழக தொல்லியல் துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
முதல்வர் மு.க ஸ்டாலின் கீழடி அருங்காட்சியகம் மற்றும் பொருணை நாகரீகம் குறித்து பெருமிதத்தோடு அறிவிப்புகளை வெளியிட்ட வேளையில் தமிழர் வரலாறோடு தொடர்புடைய பகுதிகளில்,அதாவது தமிழகம் தாண்டி பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் அப்பகுதி தொல்லியல்துறை உதவியோடு அகழாய்வு நடைபெறும் என்று கூறினார்.
இராஜராஜபுரம் என்று அழைக்கப்பட்ட சோழர்களோடு தொடர்புடைய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தலக்காடு பகுதி, சேரநாட்டின் துறைமுகமாக இருந்த கேரளாவின் பட்டணம் (முசிறி) பகுதி, பிற நாடுகளுடன் தமிழர் வாணிபம் மேற்கொண்ட ஒடிசாவின் பாலூர் துறைமுகம், முதலாம் இராஜராஜன் ஆட்சி செய்த ஆந்திர மாநிலம் வேங்கி பகுதி ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை தன் ஆய்வை தொடங்கும் எனத் தெரிகிறது.
எகிப்து,ஓமன் இந்தோனேசியா, தாய்லாந்து ,மலேசியா வியட்நாம் ஆகிய நாடுகளில் அங்குள்ள தொல்லியல் துறையோடு இணைந்து தமிழர் வரலாறு தொடர்புடைய அகழாய்வு நடைபெறும் என்றும் முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
|