உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம் நடத்தும் உலகத் தமிழ் விழா ஏப்ரல் 29 ,2023 , இந்திய நேரம் காலை 6:30 மணி (IST) நடைபெறுகிறது. இணையவழியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 19 நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.
இந்நிகழ்ச்சியை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் தமிழியல் இருக்கைக்குழுவின் அமைப்பாளர் மருத்துவர். விஜய் ஜானகிராமன் அவர்கள் தலைமையேற்கிறார். துணை அமைப்பாளரான மரு.சு.திருஞானசம்பந்தம் துவக்கி வைக்கிறார். பலவேறு தமிழறிஞர்கள் இந்நிகழ்ச்சியில் ஆய்வுரை வழங்க உள்ளனர். இதில், தமிழ்நாடு அரசின் விருதுபெற்ற முதல் அயலகப் படைப்பாளியான பாவலர் முரசு நெடுமாறன், பெரியாரியல் பன்னாட்டு ஆய்வு மைய நிறுவனரும் அமெரிக்காவின் சமூக மேம்பாட்டுப் பணியாளருமான மரு.சோம.இளங்கோவன், வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தலைவரான பாலா.சாமிநாதன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன், கனடாவின் வாட்டர்லூ பல்கலைகழகத்தின் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக சிறப்புநிலை தமிழாய்வு மையத் தலைவர் பேராசிரியர் இரா.அறவேந்தன் மற்றும் மணவை முஸ்தபா தமிழ்க் கல்வி-கலைச்சொல்லாக்க அறக்கட்டளையின் நிறுவனரான மரு.செம்மல் முஸ்தபா உள்ளிட்ட பலரும் ஆய்வுரையாற்றுகின்றனர்.
இந்த உலகத் தமிழ் விழாவை, உலகத் திருக்குறள் இணையக்கல்விக் கழகம் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து நாளை இந்தியநேரப்படி காலை 6:30 முதல் 9:30 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் கலந்துகொள்வோர் தமிழை உலகளாவிய வளர்ச்சிக்கும் விரிவுக்கும் முன்னெடுத்துச் செல்ல ஆக்கவுரைகளை மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் வழங்க உள்ளனர். இதற்காக, எழுத்துரையைப் பதிவுசெய்து புலனத்தின் வழியாக அனுப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் குவியம் எண்: 4775896897 மற்றும் கடவுச் சொல்: 123456 என அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம் செய்துள்ளது.
|