கோயில் திருவிழாக்களில் பாரம்பரிய கலைகள்
தமிழர்கள் நீண்ட பாரம்பரிய கலாச்சார வரலாறு உடையவர்கள். கலைகளைப் போற்றும் பண்புடையவர்கள். தமிழ் மண் பல்வேறு தனித்தன்மையான கலைகளுக்கு சொந்தமானது. அதனைப் பாதுகாத்து வளப்படுத்துவது இன்றைய தலைமுறையின் முக்கிய கடமையாக இருக்கிறது.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் பாரம்பரியமான கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ் மக்கள் தங்கள் கலை மற்றும் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை பெறுவது நிச்சயம். மேலும் நலிவு நிலையில் உள்ள கலையும் கலைஞர்களும் அந்நிலையில் இருந்து மீட்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது. தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, இசைப் பள்ளியில் பயின்று பயிற்சி பெற்ற கலைஞர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
|