தேசிய மின் ஆய்வாளரின் சோதனையிலும் `ரயில் 18 தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து, இதன் சேவை அடுத்த வாரம் தொடங்கும் என கூறப்படுகிறது.
எந்திரம் இல்லாமலேயே இயங்கும் நாட்டின் முதல் அதிநவீன சொகுசு ரயிலான `ரயில் -18, சென்னை ஐசிஎப்.பில் ரூ.97 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்றாக இயக்கப்படும் இது, அதிவேக விரைவு ரயிலாகும். இது, 16 பெட்டிகளை கொண்டது.
இந்த ரயில் கடந்த சில மாதங்களாக சோதனை ஒட்டத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதை இயக்குவதற்கு ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கினார். பின்னர், மேலும், இந்த ரயிலுக்கான மின் ஆய்வு அறிக்கை ரயில்வே வாரியத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அப்போது, ரயிலை முறையாக எப்போது இயக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். எனினும், இன்னும் ஒரு வாரத்தில் ‘ரயில் 18’ன் சேவை தொடங்கும் என்றும், அதை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
|