கடந்த சனிக்கிழமை ஆகஸ்டு 05, 2017-ல் வட அமெரிக்காவின் கலிபோர்னியாவில் முதன் முதலாக வள்ளலாருக்கு ஒரு தனித்துவமான விழா நடைபெற்றது. இதில் வட அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆன்மநேய அருட்சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கியுப்பர்டினோ நகர மேயர் திருமதி.சபிதா வைத்தியநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் வளைகுடா தமிழ்மன்றத்தின் தலைவர் திரு.குணா பதக்கம், திரு.சந்திரசேகர் , யோகி ஸ்டீவன் , வள்ளலார் யுனிவர்சல் மிசன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.துரை சந்தானம், திரு.தில்லை குமரன், திருமதி.கீதாநிதி ஜெயபாண்டியன் போன்றோர் பல்வேறு தலைப்புகளில் வள்ளலாரின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இன்னிசை ஏந்தல் திருபுவனம் G ஆத்மநாதன் அவர்கள் பயிற்சியளித்த குழந்தைகள் வள்ளலார் பாடல்களைப் பாடி அசத்தினர். திருபுவனம் G ஆத்மநாதன் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் வள்ளலார் பாடல்களைப் பாடி அருட்பா இன்னிசையோடு நடந்த சுத்த சன்மார்க்கப் பெருவிழாவாக நிகழ்ச்சியை மாற்றினார் .
இதை வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா என்ற அமைப்பு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்தது. இந்த அமைப்பு வள்ளலார் சன்மார்க்க வழியை பின்பற்றுபவர்களை அமெரிக்காவின் மாநில அளவில் ஒருங்கிணைத்து வள்ளலார் கருத்துக்களை மக்களிடையே எடுத்துச்செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..
|