பெயர் : P.தேவி, D/o.பத்மநாதன், பிறந்த தேதி : 12-05-1994, பிறந்த நேரம் : இரவு மணி 07.35, பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர், சந்திர தசை இருப்பு : 3-8-3.
|
எனது மகள் காதல் பண்ணுவாளா? எப்படிப்பட்ட திருமணம் நடக்கும்? படித்து வேலைக்குச் செல்வாளா? வேலை கிடைத்து வெளிநாடு செல்வாளா? குழந்தை பாக்யம் உண்டா? எங்களது பேச்சை என் பெண் வருங்காலத்தில் கேட்டு நடப்பாளா?
விருச்சிக லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் புதல்விக்கு 7ம் இடமான கணவ்ன் ஸ்தானத்தில் 4 கிரகங்கள் அமர்ந்திருப்பது நல்லதல்ல. அதுவும் சந்திரன், சுக்ரன், கிரகச் சேர்க்கை காதலையும் புதன் அமர்ந்து இருப்பது காதல் வாழ்க்கையும் குறிப்பிடும். மேலும் 7ம் இடமான கணவன் ஸ்தானத்திற்குரிய சுக்ரன் 7ல் அமர்ந்து அவர் 1,6க்குடைய செவ்வாய் சாரம் பெற்று செவ்வாய் 5ல் அமர்வது சுமாரான பலன் ஆகும். 7ம் இடம் ஆணையும் 5ம் இடம் என்பது காதலையும் குறிக்கும். எனவே தங்கள் பெண் ஜாதகத்தில் காதல் திருமணம் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும் கேது பகவான் 7ம் இடமான கணவன் ஸ்தானத்தில் அமர்வது உங்கள் ஜாதி, மதம், இனத்திற்கு அப்பாலுள்ள பையன் கணவனாக வருவான்.
தற்பொழுது உங்கள் புதல்விக்கு ராகு தசையில் கேது புத்தி 01-08-2016 வரை நடப்பில் உள்ளது. ராகு லக்னத்தில் அமர்ந்து அவர் 2,5க்குடைய குரு சாரம் பெற்று அந்தக் குரு 12ம் இடத்தில் அமர்வது உங்கள் புதல்வி உயர் கல்வி பயில்வதையும் பிற்காலத்தில் வெளியூர் வெளி மாநிலம் வெளிநாடு செல்வதையும் காட்டுகிறது. கண்டிப்பாக உங்கள் புதல்விக்கு குழந்தை பாக்யம் உண்டு. புத்திர ஸ்தானாதிபதியான குரு 12ல் இருப்பதும் அவர் ராகு சாரம் பெறுவதால் குழந்தை பாக்யத்தில் தடையேற்பட்டு குழந்தை பிறக்கும். உங்கள் புதல்வி விருச்சீக லக்னத்தில் செவ்வாய் வீட்டில் ஜனனமானதால் உங்கள் பேச்சை உங்கள் புதல்வி கேட்க மாட்டாள். ராகு தசை நடப்பதால் “துர்க்கையையும்”, “காளியையும்” வணங்கிவரச் சொல்லவும்.
ஜோதிட இமயம் அபிராமி சேகர்
maduraiabiramisekar@gmail.com
9994811158
|