|
||||||||
ஆட்சி முறை சிறக்க வேண்டும் |
||||||||
தன் மீது விசுவாசம் கொண்ட மக்களைப் பாதுகாப்பதற்காக, தனது நாட்டின் மீது படை எடுத்து வரும் பிற நாட்டு அரசனோடு போராடி, தன் உயிரையே தியாகம் செய்தார்கள், முற்காலத்து ஆட்சித் தலைவர்களில் பலர். எதிரி என்ற பெயர் வைத்து மனிதரை அழித்து வந்த முறை அது.
தான் ஒரு ஆட்சித் தலைவனாக வருவதற்காகத் தன் மீது விசுவாசம் கொண்ட மக்களையே சமயம் வாய்ப்பின் பலியிடத் துணிந்து வஞ்சகமாகத் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றார்கள், இந்நாளில் அரசியல் தலைவர்களில் பலர். பல மக்களைச் சுரண்டியும், கொன்று குவித்தும் ஒருவன் பொருள், புகழ், அந்தஸ்து, அதிகாரம் என்பனவற்றைத் தேடிக் கொள்ளும், பாதுகாத்துக் கொள்ளும் முறையில் நடைபெறும் அரசியலுக்கு ஜனநாயக ஆட்சி முறை என்ற பெயர் நீடித்திருப்பது அந்நாட்டு மக்களில் சிந்திக்கும் ஆற்றலுடைய அறிஞர்கள் வெட்கப்பட வேண்டிய ஒரு நிலைமையே.
நீண்ட கால சமூகத் தொண்டின் மூலம் தகுதியும், திறமையும் பொறுப்புணர்ச்சியும் பெற்ற ஒரு சமுதாய நன்னோக்க வாதியைத் தங்கள் அரசியல் தலைவனாக நியமித்துக் கொள்ளும் அளவுக்கு மக்களிடம் சிந்திக்கும் ஆற்றல் உண்டாகும் வரைக்கும் எந்த நாட்டிலும் கயவர்கள், நயவஞ்சகர்கள், ஒழுங்கீனர்கள் இவர்கள் ஆட்சித் தலைவராகவோ, அரசியல் கட்சித் தலைவராகவோ வரும் வாய்ப்பு நீடிக்கும்
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
தன் மீது விசுவாசம் கொண்ட மக்களைப் பாதுகாப்பதற்காக, தனது நாட்டின் மீது படை எடுத்து வரும் பிற நாட்டு அரசனோடு போராடி, தன் உயிரையே தியாகம் செய்தார்கள், முற்காலத்து ஆட்சித் தலைவர்களில் பலர். எதிரி என்ற பெயர் வைத்து மனிதரை அழித்து வந்த முறை அது.
தான் ஒரு ஆட்சித் தலைவனாக வருவதற்காகத் தன் மீது விசுவாசம் கொண்ட மக்களையே சமயம் வாய்ப்பின் பலியிடத் துணிந்து வஞ்சகமாகத் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றார்கள், இந்நாளில் அரசியல் தலைவர்களில் பலர். பல மக்களைச் சுரண்டியும், கொன்று குவித்தும் ஒருவன் பொருள், புகழ், அந்தஸ்து, அதிகாரம் என்பனவற்றைத் தேடிக் கொள்ளும், பாதுகாத்துக் கொள்ளும் முறையில் நடைபெறும் அரசியலுக்கு ஜனநாயக ஆட்சி முறை என்ற பெயர் நீடித்திருப்பது அந்நாட்டு மக்களில் சிந்திக்கும் ஆற்றலுடைய அறிஞர்கள் வெட்கப்பட வேண்டிய ஒரு நிலைமையே.
நீண்ட கால சமூகத் தொண்டின் மூலம் தகுதியும், திறமையும் பொறுப்புணர்ச்சியும் பெற்ற ஒரு சமுதாய நன்னோக்க வாதியைத் தங்கள் அரசியல் தலைவனாக நியமித்துக் கொள்ளும் அளவுக்கு மக்களிடம் சிந்திக்கும் ஆற்றல் உண்டாகும் வரைக்கும் எந்த நாட்டிலும் கயவர்கள், நயவஞ்சகர்கள், ஒழுங்கீனர்கள் இவர்கள் ஆட்சித் தலைவராகவோ, அரசியல் கட்சித் தலைவராகவோ வரும் வாய்ப்பு நீடிக்கும்
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
|
||||||||
by Swathi on 18 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|