சிங்கம் 2 வை அடுத்து, மீண்டும் கூட்டனி சேரப்போகிறார்கலாம் சூர்யாவும், இயக்குனர் ஹரியும்.
நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து 'ஆறு','வேல்','சிங்கம்','சிங்கம்2' ஆகிய நான்கு படங்களை ஹரி இயக்கியுள்ளார். தற்போது ஐந்தாவது படத்தையும் இயக்க உள்ளார்.
'பூஜை' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹரி பேசியதாவது,. '' என் இயக்கத்தில் 12 படங்கள் வெளிவந்துவிட்டன. 13வது படமாக 'பூஜை' தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது.
இப்படத்தை அடுத்து, சூர்யாவுக்குப் படம் இயக்க உள்ளேன். விரைவில் அதற்கான கதை விவாதத்தில் ஈடுபட உள்ளேன். '' என்று தெரிவித்தார்.
'மாஸ்' படம் முடிந்த பிறகு ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|