LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாண்டிய நாடு என்னுடைய கதை - போர்க்கொடி தூக்கிய உதவி இயக்குனர் !!

சுசீந்தரன் இயக்கத்தில், விஷால், லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி, கடந்த 1 ம் தேதி ரிலீசான பாண்டியநாடு திரைப்படம் வசூலில் சிகரம் தொட்டு வருகிறது. இந்நிலையில் பாண்டியநாடு திரைப்படம் என்னுடைய கதை என புவனராஜா என்ற உதவி இயக்குனர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

 

இது குறித்து இயக்குனர் புவனராஜா கூறியதாவது, அழகர்சாமியின் குதிரை படப்பிடிப்புக்கு ஆண்டிப்பட்டிக்கு இயக்குனர் சுசீந்திரன் வந்தபோது, நான் இயக்கிய குறும்படம் மட்டுமின்றி, என்னிடமிருந்த இரண்டு கதைகளை சொன்னேன். அந்த இரண்டு கதைகளையும் இணைத்துதான் இப்போது அவர் பாண்டியநாடு படத்தை இயக்கியிருக்கிறார் மேலும், கதையின் முக்கிய சாரம்சத்தை எடுத்துக்கொண்டு, மணல் திருட்டை கிரானைட் திருட்டு என்றும், லாரி மோதி சாவதை பஸ் மோதி சாவது போலவும் மாற்றியிருக்கிறார் என குற்றம் சாட்டுகிறார் உதவி இயக்குனர்.

 

ஆனால் இதுகுறித்து சுசீந்திரன் தரப்பில் கூறும்போது, தேனி பகுதிகளில் ஒருவரை பழி வாங்கும்போது கை கால்களை கட்டி கிணற்றில் போட்டு விடுவார்கள் என்பதைத்தான் ஒருமுறை என்னிடம் சொன்னார் புவனராஜா. அதை மட்டுமே நான் க்ளைமாக்சில் பயன்படுத்தினேன். மற்றபடி அவர் கதையை நான் படமாக்கி விட்டேன் என்று கூறுவதில் உண்மையில்லை என்று மறுத்துள்ளார். அதோடு, புவனராஜா மீது இயக்குனர் சங்கத்திலும் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.

by Swathi   on 23 Nov 2013  0 Comments
Tags: Bhuvana Raja   Pandiya Nadu   Pandiyanadu Story   பாண்டிய நாடு           
 தொடர்புடையவை-Related Articles
பாண்டிய நாடு என்னுடைய கதை - போர்க்கொடி தூக்கிய உதவி இயக்குனர் !! பாண்டிய நாடு என்னுடைய கதை - போர்க்கொடி தூக்கிய உதவி இயக்குனர் !!
பாண்டிய நாடு - திரைவிமர்சனம் பாண்டிய நாடு - திரைவிமர்சனம்
பாண்டியநாடு படத்திற்கு யு ஏ சான்றிதல் !! மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார் விஷால் !!! பாண்டியநாடு படத்திற்கு யு ஏ சான்றிதல் !! மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார் விஷால் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.