கட்சிப்பாட்டு என்ற கலை வில்லிசைக்கலையுடன் தொடர்புடையது. இக்கலையானது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகியிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இக்கலையானது கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு வட்டத்தில் உள்ள நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களில் நிகழ்கிறது. கட்சி பாட்டிற்குரிய இசைக்கருவிகள் வில் ,குடம், டோலக் ,ஜால்ரா ,கட்டை ஆகியன , வில்லிசைக்குரிய வில்லையே கட்சிப் பாட்டிலும் பயன்படுத்தினாலும் இக்கலைக்குரிய வில் ஆடம்பரமின்றி கவர்ச்சியின்றி இருக்கும். இரு குழுக்களாகப் பிரிந்து.ஒரு குழுவின் தலைவர் பாடியதும், அதற்கு எதிர் குழுவினர் பதில் பாடுவதுமே இவ்வகை கலையாகும். இன்றைய நிலையில் இக்கலையை நிகழ்த்துகிறவர்கள் மிகவும் அருகிவிட்டனர்.
|