|
|||||
நம்மாழ்வாரின் கருத்துகளை வலியுறுத்தும் அச்சாணி !! |
|||||
புதுமுக இயக்குனர் லோகேஷ் சந்தர் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் அச்சாணி.
இந்தப் படம் மறைந்த வேளாண் விஞ்ஞாசனி நம்மாழ்வார் கருத்துக்களை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் விவசாயிகள் தற்கொலையையும் மையமாக கொண்ட படம் என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் சம்பத், ராஜேஷ், வெங்கடேசன் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகளாக நடித்திருக்கிறார்கள். ஹீரோயின் இல்லை. ரூபன் இசை அமைத்திருக்கிறார். கிரி, ரமேஷ், ராஜேந்திரன் ஆகியோர் கேமராமேனாக பணியாற்றி உள்ளனர்.
அச்சாணி படம் குறித்து, அதன் இயக்குனர் லோகேஷ் சந்தர் கூறியதாவது,
கடுமையான போராட்டங்களுக்கு இடையில் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். அழிந்து வரும் விவசாய தொழிலை காப்பாற்றும் முயற்சியாக இது தயாராகி உள்ளது. மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை சந்தித்து எதிர்கால விவசாயம் பற்றி அவருடன் பேசி, அவர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றை விவசாயிகளின் நிலை, தற்கொலை வரை அவர்களை கொண்டு செல்லும் கடன், ஆகியவை பற்றியும் படம் பேசுகிறது. மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் என்கிறார் இயக்குனர் லோகேஷ் சந்தர். |
|||||
by Swathi on 27 Jan 2014 0 Comments | |||||
Tags: Achchani Movie Achchani Nammalvar Nammalvar Thoughts நம்மாழ்வார் அச்சாணி அச்சாணி நம்மாழ்வார் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|