LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1172 - கற்பியல்

Next Kural >

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? (விளைவது: பிரிந்து போயவர் வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல், முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண்கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது எற்றுக்கு? இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
தெரிந்து உணரா நோக்கிய உண்கண்-மேல் விளைவதை ஆராய்ந்தறியாது அன்று காதலரைக் காதலொடு நோக்கிநின்ற என் மையுண்ட கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன்-இன்று இது நம்மால் வந்ததுதானே! ஆதலாற் பொறுத்துக்கொள்ளல் வேண்டுமென்று அன்போடு! கூறுபடுத்துணராது, துன்புற்று வருந்துவது ஏன்? துன்பம் வருமுன் காவாதார் அதுவந்தபின் வருத்துவது வீண்மடச்செய்கை யென்பதாம்.மேல் விளைவாவது பிரிவினுல் நேரும் ஆற்றாமைத் துன்பம்.
கலைஞர் உரை:
விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?.
சாலமன் பாப்பையா உரை:
வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
ஆராய்ந்து அறிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு, கண்டவுடனேயே அவர்மீது ஆசை கொண்டுவிட்ட இந்த அறிவில்லாத கண்கள் இப்போது பரிந்து பரிந்து அழுவது எதற்காக?
Translation
How glancing eyes, that rash unweeting looked that day, With sorrow measureless are wasting now away!.
Explanation
The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).
Transliteration
Therindhunaraa Nokkiya Unkan Parindhunaraap Paidhal Uzhappadhu Evan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >