LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருக்குறள் உலக சாதனை : 400 அடி நீளம் கொண்ட உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பு வெளியிடப்பட்டது!

2015 ஆம் ஆண்டு திருவள்ளுவர் நாளை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக உலகின் மிக நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னை மெரீனா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே வெளியிடப்பட்டது. 133 அதிகாரங்கள் அடங்கிய 1330 திருக்குறளும் 400 அடி நீளமுள்ள நெகிழிப் பதாகையில் அச்சிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இம்முயற்சி இதுவரை யாரும் செய்யாத முயற்சியாகும். திருவள்ளுவர் நாளில் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு திருக்குறளுக்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழ் மக்கள் வள்ளுவர் நாளை கொண்டாடும் விதமாக இனிப்புகள் பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

அடுத்தடுத்து வரும் திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் நாளில் இந்த சாதனையை முறியடிக்க தமிழ் அமைப்புகள் முயற்சி மேற்கொள்வோம். இதே போல மற்ற மாவட்டங்களிலும் உள்ள தமிழ் அமைப்புகளும் திருக்குறளின் அடிப்படையில் புதிய சாதனைகளை படைத்து திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திருவள்ளுவர் உலகிற்கு வழங்கிய திருக்குறளின் பெருமையை இந்தியாவில் உள்ள தமிழர் அல்லாதவர்களுக்கும், உலக மக்களுக்கும் சென்று சேர வேண்டும்.

அதற்காக நம் கோரிக்கைகள் வருமாறு: இந்திய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். திருவள்ளுவர் பிறந்த நாளை மொழி இன சமத்துவ நாளாக அறிவிக்க வேண்டும். இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டு கற்பிக்கப்படுதல் வேண்டும். திருவள்ளுவருக்கு தமிழில் நாணயங்கள் அஞ்சல் தலைகள் வெளியிட வேண்டும். பாராளுமன்றத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும். இந்திய அரசு திருக்குறள் காட்டிய நெறிப்படி ஆட்சி நடத்தி வள்ளுவர் வகுத்த மொழி இன சமத்துவத்தை பேணும் மக்களாட்சியை வழங்க வேண்டும். இதை கருத்தில் வைத்தே இச்சாதனை முயற்சியை தமிழர் பண்பாட்டு நடுவமும், தமிழ் ஆன்றோர் அவையும் இணைந்து முன்னெடுத்துள்ளன.

400 feet long and 4 feet wide Thirrukural printed work released
by Swathi   on 12 Jan 2015  1 Comments
Tags: Thirukural   திருக்குறள்   திருக்குறள் சாதனை   Thirukural world record           
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் ! தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் !
கருத்துகள்
29-Mar-2015 05:14:46 விஜய் said : Report Abuse
எமது தாய் மொழி தமிழே ,நன்றி கோடி உனக்கு ,திரு வள்ளுவர் என்பவர் எமது தாய்மொழி தமிழின் கடவுள் ,இன்று உலகம் போற்றும் உன்னத தமிழை உலகறிய செய்ததில் எம் பாட்டனான திருவள்ளுவரின் பங்கு அதிசிறந்தது .ஆகவே உலக தமிழர் அனைவரும் திருவள்ளுவரின் பிறந்தநாளை தமிழ் பற்றோடு கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வது நாம் மற்றும் அல்ல நம் தமிழே .400 அடி கொண்ட திருக்குறள் பதிப்பை உலகசாதனையாகக்கியதற்கு அணைத்து தமிழர்கள் சார்பாக எம் நல் வாழ்த்துக்கள் கோடி.தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.வாழ்க தமிழ் ,,,,
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.