சென்னை சைதாப்பேட்டையில் டீக்கடையில் வேலைப் பார்ப்பவர் எம்.ஷாகுல்ஹமீது. இவரது மகள் பாத்திமா சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பயின்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1,109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். பாத்திமாவிட்கு பொறியியல் துறையில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால் அவருடைய தந்தையின் வறுமை சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை.
இந்த விஷயத்தை தனது உதவியாளர்கள் மூலம் அறிந்து கொண்ட நடிகர் விஜய், பாத்திமாவின் பொறியியல் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டார். சென்னை கே.கே நகரில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் இதற்கான தொகையை நடிகர் விஜய் கட்டினார்.
இது குறித்து மாணவி பாத்திமா கூறும் போது,
பொறியியல் துறையில் ஐடி கோர்ஸ் படிக்க வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம். ஆனால் எங்கள் வறுமை சூழ்நிலையால் மேற்கொண்டு படிக்க முடியாமல் போய்விடுமோ என தவித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயம் கடவுள் போல் விஜய் அண்ணா வந்து எனக்கு உதவி செய்துள்ளார். இந்த உதவியை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன். நான் நல்லபடியாக படித்து வேலைப் பார்த்து என் குடும்பத்தை காப்பாற்றுவேன். நன்றாக படி, எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று எனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் தந்த விஜய் அண்ணாவிற்கு நன்றி என கண்ணீர் மல்க பாத்திமா கூறினார்.
|