தனுஸ், விஷால், ஆர்யாவை அடுத்து தயாரிப்பு உலகில் புதிதாக களமிறங்குகிறார் விஜய் சேதுபதி.
இன்றைய இளம் ஹீரோக்களுக்கு தாங்களும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. இதற்கு காரணம், கமர்சியல் கதைகளை மட்டுமே தயாரிப்பதற்கு முன்வரும் படாதிபதிகள் வித்தியாசமான கதைகள் என்றால் ஓடிஒழிவதுதான். இதனால் தங்களை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்கிறபோது தாங்களே தயாரிப்பாளராக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள் ஹீரோக்கள்.
இந்நிலையில், தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான விஜயசேதுபதிக்கும் தயாரிப்பாளர் ஆசை தலைதூக்கியிருக்கிறது. ஏற்கனவே தான் நடித்த சங்குதேவன் என்ற படத்தை முதல் காப்பி அடிப்படையில் தயாரித்தார் விஜயசேதுபதி. ஆனால், அவருக்கு பணம் கொடுத்து உதவியவர் திடீரென்று கைவிரித்து விடவே அப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், அடுத்து தான் நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை தானே தயாரிக்கிறாராம். இதற்காக வங்கியில் பணம் பெற்று தானே நேரடி தயாரிப்பாளராக களமிறங்குகிறாராம் விஜய் சேதுபதி.
|