|
||||||||
அமெரிக்காவில் மற்றொரு தமிழ் அறிஞர் ... முனைவர் இராமசாமி செல்வராசு ! |
||||||||
நேற்று முகநூலில் வேதி அறிவியல் அறிஞர் ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்களின் தமிழ்ப்பணிபற்றிப் பதிவிட்டிருந்தேன்.
இன்று மற்றொரு வேதிப்பொறியியல் அறிஞர் ... தமிழ் ஆய்வாளர்பற்றிப் பதிவிடுகிறேன்!
என்னைப்போன்ற தமிழாசிரியர்களுக்குப் ''போட்டியாக .. ஒரு படி மேலாக'' ... தமிழ் ஆய்வுலகில் நிறைகுடமாக ... அமைதியாகத் தன் தமிழ் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்துகொண்டிருப்பவர் நண்பர் முனைவர் இராமசாமி செல்வராசு அவர்கள்!
தமிழகத்தின் ஈரோடு நகரைச் சேர்ந்தவர். சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலில் ( Chemical enginnering) இளங்கலைப் பட்டம்பெற்று (1987-91) , பின்னர் அமெரிக்காவில் University of Louisville - இல் முதுகலை, முனைவர் பட்டங்களை (91-95) வேதிப் பொறியியலில் பெற்றுள்ளார்!
தனது கல்விக்குப்பிறகு அமெரிக்காவிலேயே பல்வேறு நிறுவனங்களில் வேதிப்பொறியியல் - குறிப்பாக எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனங்களில் - தனது பணிகளைத் தொடர்ந்துவருகிறார்!
அது ஒருபுறம் இருக்க .... அவரது தமிழ்மொழி ஆய்வுப்பணி என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். முகநூல்வழியேதான் தொடர்பு ஏற்பட்டது! தமிழ்மொழி, கணினித்தமிழ்பற்றி நான் ஏதாவது ஒரு இடுகை முகநூலில் இட்டால், அதற்கு முதல் விமர்சகராக திரு. இராமசாமி செல்வராசு அவர்கள்தான் தனது கருத்துக்களை முன்வைப்பார்! அவர் என்ன சொல்வாரோ என்ற அச்சமும் ஆர்வமும் எனக்கு இருக்கும்!
எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும் அவரது ஆழமான .. நுட்பமான தமிழ்மொழிப் புலமை கண்டு! மண்ணில் எண்ணெய் தோண்டுவதுபற்றிய ஆய்வுப் பணியில் இருப்பவருக்கு ... தமிழ்மொழி இலக்கணங்களின் நுட்பங்களைத் தோண்டி வெளிக்கொணரும் திறமையும் இருக்கிறது! அவர் ஒரு கருத்தை முன்வைத்தால், அதை மறுப்பது அவ்வளவு எளிது இல்லை!
தமிழ்மொழியின் பல நுட்பமான இலக்கணக்கூறுகளை அவரிடமிருந்து நான் கற்றுள்ளேன்... பெற்றுள்ளேன் என்பதை இங்கு மிகவும் அழுத்தமாகக் கூறுகிறேன்! எப்படி அவர் இந்தத் தமிழ் இலக்கண நுட்பங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்று நான் வியப்பது உண்டு!
அதற்கு அடிப்படை .. அவரது அறிவியல் ஆய்வுமுறைகளே என்பதில் ஐயம் இல்லை! இயற்கையின் அமைப்பு... செயல்பாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே அமைந்துள்ளன என்ற அவரது அறிவியல் அறிவு... தமிழின் பண்புகளும் குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டே அமைந்திருக்கின்றன என்ற பார்வைக்கு இட்டுச் சென்றிருக்கிறது!
என்னுடைய அடையாறு அலுவலகத்திற்கு ஒரு தடவை வந்திருந்து சிறப்பித்தார்! என்னுடனும் பேராசிரியர் அ. கோபால், முனைவர் கி. உமாதேவி திரு. சரவணன் (கணினிப்பொறியியல் நிபுணர்) ஆகியோருடன் சில மணி நேரங்கள் செலவழித்தார்!
இவரைப்பற்றிப் பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் அவர்கள் ( மின்னியல் துறை, வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா) கூறிய ஒரு கருத்து ... ''தமிழுலகில் ஒரு 100 செல்வராசு இருந்தால் ஒளிருமே!''
அவருடைய இணையப் பக்கம் செல்ல ...
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|