LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் ஆர்வலர்கள்

கணினித்தமிழ் ஆய்வாளர் திருமதி ம. பார்கவி ( 1984)

திருமதி ம. பார்கவி ( 1984) ... போடிநாயக்கனூரில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிப்படிப்பிற்குப் பின்னர், திண்டுக்கல் ஆர். வி. எஸ். பொறியியல் கல்லூரியில் பி.இ. ( மின்னணுவியல் , தகவல்தொழில்நுட்பம்) படிப்பில் இணைந்து 2006-இல் பட்டம் பெற்றார். அதன்பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் (தமிழ்மொழித்துறையின்) மொழியியல் ஆய்வுப்பிரிவில் நிறுவப்பட்டிருந்த கணினிமொழியியல் ஆய்வுக்கூடத்தில் ( Computer assisted Language Technology Lab - CALT) 2007-08 ஆண்டுகளில் கணினிநிரலாக்கராகப் பணிபுரிந்தார். அங்கே முதுகலை, எம்ஃபில் கணினிமொழியியல் படித்த மாணவர்களுக்குக் கணினியின் அடிப்படைகள், நிரலாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு உதவினார்.
 
மொழியியல் துறையோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட இவர், பின்னர் அத்துறையில் செயற்பாட்டுமொழியியல் மாணவராகவே இணைந்து (2008-10) , அதில் முதுகலைப் பட்டம் பெற்றார். இதன் பயனாக இவர் கணினிமொழியியல் துறையில் முழுமையாக ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்காக அதனுடைய விஷுவல் ஸ்டுடியோ 10 -க்கான ( Visual Studio 2010) தமிழாக்கம் ( Localization) செய்யும் பணிக்குழுவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 2010 ஜூலைமுதல் நான் நிறுவியுள்ள என் டி எஸ் லிங்கசாஃப்ட் சொலூஷன்ஸ் நிறுவனத்தில் கணினிமொழியியல் நிரலாக்கராகப் பணியில் இணைந்தார். மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர் மென்பொருளுக்கான உருவாக்கத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அந்த மென்பொருளின் சிறப்பான பகுதிகளான சொற்பிழைதிருத்தி, சந்திப்பிழைதிருத்தி ஆகியவற்றை உருவாக்குவதிலும் அதற்கு அடிப்படையான தமிழ் உருபன்பகுப்பாய்வியை ( Morphological Parser) உருவாக்குவதிலும் அதற்கான தரவை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். தொடர்ந்து அந்த மென்தமிழ் மென்பொருளை வளர்த்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.
 
குறிப்பாக, தமிழுக்கான விசைப்பலகைகள், ஒருங்குறி அல்லாத தமிழ்ப் பனுவல்களை ஒருங்குறியில் மாற்றித் தரும் மொழிக்கருவி ( Encoding Converter) , சொல்லடைவு ( Indexing) , ஆய்வாளர்களுக்கு உதவும் துணைநூல்பட்டியல் தயாரிப்பு ( Bibliography) போன்ற மொழிக்கருவிகளை உருவாக்குவதில் பெரும்பங்காற்றிவருகிறார். பொறியியலில் பட்டம் பெற்று, பின்னர் செயற்பாட்டுமொழியியலிலும் பட்டம் பெற்ற இவர், ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாகத் தமிழ்க்கணினிமொழியியல் துறையில் தன்னை ஈடுபடுத்திவருகிறார். இவருடைய கணவரும் ( திரு. அருண்குமார்) ஒரு மென்பொருள் பொறியாளரே.
by Swathi   on 21 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.