தெய்வ சிந்தனையும் மற்றவர்களுக்காக தியாகம் செய்து வாழும் கும்பலக்னத்திற்கு ராகு பகவான் 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதும் கேது பகவான் லக்னத்தில் செய்வதும் சிறப்பானதாகும். ராகு 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத நன்மைகள் நடந்தேறும். எடுக்கும் காரியங்கள் கைகூடும். புதிய விஷயங்களில் ஈடுபாடும் அதனைச் செயல்படுத்த தகுந்த நபர்களும் வந்து சேர்வர் அடிக்கடி பயணங்கள் ஏற்படும். அதனால் நன்மையாவைகளே நடந்தேறும். பேச்சில் சாமர்த்தியமும் இனிமையும் கூடும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். உடன்பிறந்த சகோதர சகோதரர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். அவர்களுக்கு இதுவரையில் நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். புதிய உறவுகள் வந்து சேரும். நட்பு வட்டாரம் பெருகும். அதனால் நன்மைகள் உண்டாகும்.
எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும் வாய்ப்புகள் ஏற்படும். வீடு வண்டி வாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். தாயாரால் நன்மைகள் ஏற்படும். உணர்வுகளை கட்டுக்குள் வைக்காவிடில் பொருள் பறிபோகும், நிலை ஏற்படும். நம் கண்முன்னே நம் பணம் பொருள் பறிப்போகும் நிலை அமையும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. ஜாமின் சாட்சி போன்ற கையெழுத்துக்கள் போடுதல் கூடாது. அதனால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும்.
விருந்து கேளிக்கைகளில் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். உல்லாசங்களில் மனதை தேவையில்லாமல் செலுத்துதல் கூடாது. குழந்தைகளால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். பாஸ்போர்ட் விசா போன்றவற்றில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுப் பின் வந்து சேரும். காதல் விஷயங்களில் சில நேரம் மகிழ்ச்சியாகவும் சிற்சில சமயங்களில் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். மனைவியின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். வழக்குகள் இழுபறி நிலையாகவே இருந்து வரும். எதிர்கள் மறைமுகமாகத் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நேரமிது. வெளிநாட்டுத் தொடர்பால் எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். நண்பர்களால் நன்மைகளும் மகிழ்ச்சியும் எதிர்பார்த்த உறவுநிலைகளும் தொடரும்.
உத்யோகம் வேலை (JOB)
அரசு வேலை மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களை குறிப்பிடும் வார்த்தையே உத்யோகம் ஆகும். இங்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைபார்க்கும் ஊழியர்களை உத்யோகம் என்ற கணக்கில் பலன் கூறப்படுகிறது. இதுவரை வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கிடைத்த வேலையில் முதலில் சேருதல் நலம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உத்யோகத்தில் உயர்வு நிலை ஏற்படும். அத்துடன் ஊதிய உயர்வும் ஏற்படும். பார்க்கும் கம்பெனியை விட்டு வேறு கம்பெனிக்கு பேப்பர் போடுவதில் சற்று கவனமுடன் செயல்படுதல் வேண்டும். “ஆன்சைட்” கிடைத்து வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயரதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். எனவே அதிகக் கவனமுடன் அவர்களிடம் நடந்து கொள்ளல் வேண்டும். சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
சிறுதொழில் சுயதொழில் குறுந்தொழில் புரிபவர்களுக்கு சற்று சுமாராகவே இருந்து வரும். அதே சமயம் உற்பத்தி சார்ந்த துறைகளில் தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பெறுவர். பங்குச்சந்தையில் அதிகக் கவனம் தேவை. சேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். கூட்டுத் தொழில் புரிய வாய்ப்பு அமையும். கூட்டுத் தொழிலில் நல்ல புரிந்து உணர்வுடன் செயல்பட வாய்ப்புகள் அமையும். அதே சமயம் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்கள் நல்ல லாபம் தருவையாக அமையும். நீர், உணவு, கப்பல், மீன்பிடித் தொழில்கள் சற்று சுமாராக இருக்கும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் சேவைகள் நல்ல லாபகரமாக அமையும். ஏஜென்ஸி, கன்சல்டன்சி, புரோக்கர், ரியல் எஸ்டேட் துறைகள் நல்ல லாபகரமாகவும் மருத்துவம், கல்வி, விஞ்ஞானம், கெமிக்கல் துறைகள் நல்ல லாபகரமாக அமையும். ஆடை, ஆபரணம் இரும்பு எஃகு சிமெண்ட் உற்பத்தி சார்ந்த துறைகள் நல்ல லாபகரமாக அமையும். தெருவோர வியாபாரம் சற்று சுமாராக இருக்கும். கல்வி பேச்சால் சம்பாதிக்கும் துறைகள் நல்ல லாபகரமாக அமையும்.
விவசாயம்
விவசாயம் நல்ல லாபகரமாக அமையும். பழங்கள் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களால் நல்ல லாபம் ஏற்படும். விளைச்சலுக்கேற்ற நல்ல விலை கிடைக்கும். தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. வீரிய விதைகளே வாங்கி விவசாயம் செய்யாமல் இயற்கையாக விவசாயம் செய்ய லாபம் கிட்டும்.
அரசியல்
அரசியல் வாழ்வு சற்று ஏற்ற இறக்கமுடன் இருந்து வரும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. சமூகத்தில் சற்று மதிப்பும் மரியாதையும் குறைந்து காணப்படும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் இருப்பினும் பொதுஜனத் தொடர்பு குறைந்தே காணப்படும். வழக்குகள் இருப்பின் இழிபறி நிலையிலேயே இருந்து வரும்.
கலைஞர்கள்
இசை, நடனம், நாட்டியம், ஓவியம், சிற்பம், ஜோதிடம் சற்று சுமாரகவே இருந்து வரும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் அமையும். அவையால் ஓரளவு மட்டுமே லாபகரமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் கிட்டும். ஒரு சிலருக்கு விருதுகளும் பாராட்டுக்களும் வந்து சேரும். சின்னத்திரை ஏற்றமுடன் இருந்து வரும். விளையாட்டு வீரர்களுக்குப் பரிசும் பாராட்டும் வந்து சேரும். அதே சமயம் அரசாங்க உதவி கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்பட்டு விலகும்.
மாணவர்கள்
புதிய விஷயங்களைக் கற்பதிலும் படிப்பதிலும் ஆர்வமும் திறமையும் கூடும். படிப்பின் காரணமாக புதிய சூழ்நிலைகளில் வாழ ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. கல்விக்கடன் எதிர்பார்த்த அளவு கிடைக்கும். விரும்பிய பள்ளி கல்லூரியளில் இடம் கிடைப்பதில் சற்று தடையேற்பட்டுப் பின் நடந்தேறும். வெளிநாடு சென்று படிக்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளல் வேண்டும்.
பெண்கள்
சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும். காதல் கனிந்து திருமணத்தில் ஒரு சிலருக்கு முடியும். குழந்தை பாக்யத்தில் தடையேற்பட்டிருப்பின் குழந்தை பாக்யம் அமையும். வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதில் சற்று சுணக்கம் ஏற்படினும் இறுதியில் இனிதே நடந்தேறும். தேவையற்ற மனக்குழப்பமும் பீதியும் இருந்து கொண்டேயிருக்கும். குழந்தைகளால் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். ஆன்மீக விஷயங்களில் மனம் ஈடுபடும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பார்க்கும் வேலையில் தேவையில்லாமல் மற்றவர்களின் தலையிடுதல் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். “ஆன்சைட்” செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களின் நட்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் கிட்டும். தேவையில்லாத விஷயங்களில் பேசுவதோ தலையிடுவதோ கூடாது.
உடல் ஆரோக்யம்
தலை, கண், மார்பு அடிவயிற்றில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். உடலில் தோலில் சொரி, சிறங்கு இல்லாமல் நல்லபடியாகப் பேணுதல் வேண்டும். முறையான உடல் பரிசோதனை அவசியம் செய்தல் நலம்.
அதிர்ஷ்ட எண் : 2, 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மஞ்சள்
அதிர்ஷ்ட நாள் : திங்கள், வியாழன்
அதிர்ஷ்ட ரத்தினம் : முத்து, மஞ்சள் புஷ்பராகம்
பரிகாரம்
புதன் கிழமை தோறும் சிவனை வழிபடுதல் வேண்டும். வெள்ளிக்கிழமை “மஹாலெஷ்மியை” வணங்குதல் நற்பலன் ஆகும். வாய்ப்பிருந்தால் “நாகூர்” சென்று வர நன்மைகள் அதிகரிக்கும்.
- ஜோதிட இமயம் அபிராமி சேகர்
maduraiabiramisekar@gmail.com
9994811158
|