எப்பொழுதும் புன்சிரிப்புடன் வலம்வரும் உங்கள் ரிஷப லக்னத்திற்கு ராகு 4ம் இடத்திற்கும் கேது பகவான் 10ம் இடத்திற்கும் பெயச்சியாவதால் தொழில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் கூடும். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றியை அடையத் தீவிரமாக போராட வேண்டியது வரும். புதிய விஷயங்களைக் கற்பதிலும் அறிவதிலும் ஆர்வமும் சந்தர்ப்பமும் அதிகரிக்கும். உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். புதிய உறவுகள் வந்து சேரும். அதனால் நன்மைகள் ஏற்படும்.
இடம், வீடு, வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் கூடும். அதே சமயம் தொழில் தகராறு, தொழிலில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்படும். பார்க்கும் வேலையில் கவனம் தேவை. தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருந்து கொண்டேயிருக்கும், கொடுத்த பணம் தவணை முறையில் வந்து சேரும், தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் நலம்.
கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்க வாய்ப்பு அமையும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்க வேண்டியது வரும். எதிரிகள் விஷயங்களில் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக் கூடுமாகையால் அவர்கள் விஷயத்தில் அதிகக் கவனம் தேவை. கேது 10ம் இடத்தில் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். பாஸ்போர்ட் விசா கிடைப்பதில் சற்று காலதாமதமாகி பின் வந்து சேரும். விருந்து கேளிக்கைகளில் மன ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும்.
தாயின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் தேவையற்ற மன உலைச்சல்களும் வேதனைகளும் மிகும். தந்தையாரால் நற்பலன்கள் ஏற்படும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடிய வாய்ப்பு அமையும். சனி 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் புதிய ஆண், பெண் நட்பு வட்டாரம் அதிகரிக்கும். அதனால் மனமகிழ்ச்சி கிட்டும். நண்பர்களால் மகிழ்ச்சியும் அவர்களால் நன்மையும் ஏற்படும். வெளிநாடு செல்வதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுப் பின் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். மனைவியின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும்.
உத்யோகஸ்தர்கள், வேலை (JOB)
ராகு, குரு, 4ம் இடத்திலும் கேது 10ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் வேலையில் சற்று கவனம் தேவை. இங்கு வேலை என்பது அரசு மற்றும் தனியார் துறையையும் குறிப்பிடும். அரசு ஊழியர்கள் வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுமாகையால் சற்று கவனம் தேவை. வேலையில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு அமையும். ஒரு சிலர் பார்க்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்ல பேப்பர் போட வேண்டியது வரும். பார்க்கும் வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை நிலவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சரிவர அமையாது. வேலையில் ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்து கொண்டேயிருக்கும். “ஆன்சைட்” செல்வதில் சற்று தடையேற்பட்டு ஒரு சிலர் வேலையின் காரணமாக வெளிநாடு செல்வர்.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)
சுயதொழில் அல்லது கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு சற்று சுமாராகவே இருக்கும். ஒரு சிலர் புதிதாகத் தொழில் தொடங்க வாய்ப்புகள் அமையும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். சிறுதொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து அமையும். சிறுதொழில் ஏற்றம் மிகுந்து தரும். உற்பத்தி சார்ந்த தொழில் சற்று சுமாராக இருக்கும். போக்குவரத்து, தகவல் தொடர்பு, கமிஷன் ஏஜென்சி, புரோக்கர்ஸ், கன்சல்டன்சி தொழில்கள் லாபகரமாக அமையும். ஏற்றுமதி இறக்குமதி சற்று சுமாராக இருக்கும். பங்குச்சந்தை சற்று சுமாராகவே இருக்கும். பங்குச் சந்தையில் பெரிய் அளவில் முதலீடு கூடாது. இடம், வீடு, இவற்றில் முதலீடு செய்யலாம். இரும்பு எஃகு சிமெண்ட் சுமாராகவும், நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் சற்று மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். ஆடை, ஆபரணம், ஓட்டல், கட்டுமானம், ரியல் எஸ்டேட் நன்கு அமையும், சிறுவியாபாரிகள் சாலையோர வியாபாரிகள் ஏற்றம் பெறுவர். சுற்றுலாத்துறை சற்று சுமாராகவும், கப்பல், மீன்பிடித் தொழில் சுமாராகவும் மருத்துவம் விஞ்ஞானம் போன்ற துறைகள் ஏற்றமுடன் விளங்கும். சுயதொழில் வீட்டில் வைத்து செயல்படும் தொழில்கள் நல்ல லாபகரமாக இருக்கும்.
விவசாயிகள்
விவசாயம் ஓரளவு சுமாராக இருக்கும், பெரிய அளவில் விளைச்சல் இல்லையென்றாலும் ஓரளவு பணப்புழக்கம் இருந்து கொண்டேயிருக்கும். ஒரு சிலர் தங்கள் நிலங்களை குத்தகைக்கு விடவேண்டியது வரும். நவீன விஞ்ஞான அடிப்படையில் பயிர் செய்ய வாய்ப்புகள் ஏற்படும். புதிதாக கடன் வாங்க சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் :
அரசியல் சற்று சுமாராகவே இருக்கும். ஏனெனில் உங்கள் லக்னத்திற்கு 4ம் இடத்தில் குரு, ராகு, சஞ்சாரம் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல. தேவையற்ற விஷயங்களால் மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் தொண்டர்களின் அன்பும் அதரவும் அதிக அளவில் இருக்கும். ஆனால் பொதுமக்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். அரசியலில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.
கலைஞர்கள்
எதிர்பாராத நன்மைகள் ஏற்பட்டாலும் ஒரு சிலருக்கு பணத்தட்டுப்பாடு இருந்து கொண்டேயிருக்கும். விருதுகள் பரிசுகள் பெற சந்தர்ப்பம் அமையும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். சற்று சிரமங்களை அனுபவிக்க வேண்டியது வரும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். அவர்களால் நன்மையேற்படும்.
மாணவர்கள்
மாணவர்கள் கல்வி, விளையாட்டில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சந்தர்ப்பங்கள் அமையும். நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு கிட்டும். படிப்பின் காரணமாக வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். கலைகளில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். உயர்கல்வி பயில வாய்ப்பும் புதிய படிப்பை படிக்க சந்தர்ப்பமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிபெற சந்தர்ப்பமும் அமையும். கல்விக்கடன் உடனே கிடைக்கும் படிப்பில் அதிக நாட்டமும் ஆர்வமும் கூடும்.
பெண்கள் :
ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் அடிக்கடி அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் சற்று தடைகள் ஏற்படும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு குழந்தை பிறக்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும், குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். அதே சமயம் உயரதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். குழந்தைகளால் மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.
உடல் ஆரோக்யம் :
உடலில் அசதி, சோர்வு சற்று நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. அடிவயிறு, சிறுநீரகப் பிரச்சனை, கல் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. சளித்தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் நலம்.
அதிர்ஷ்ட எண் - 6, 8 அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, கருப்பு அதிர்ஷ்ட நாள் - வெள்ளி, சனி அதிர்ஷ்ட இரத்னம் - வைரம், கரு நீலக்கல்
பரிகாரம் :
புதன் கிழமை தோறும் “சிவனுக்கு” வில்வ இலையில் அர்ச்சனை செய்தல் நலம். சனிக்கிழமை தோறும் “ஆஞ்சநேயர்” மற்றும் “பெருமாளை” வணங்கி வர நற்பலன்கள் அதிகரிக்கும்.
- ஜோதிட இமயம் அபிராமி சேகர்
maduraiabiramisekar@gmail.com
9994811158
|