எதிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளும் உங்கள் லக்னத்திற்கு ராகு 11ம் இடத்திலும் கேது 5ம் இடத்திலும் சஞ்சாரம் செய்வது சிறப்பானது ஆகும். ராகு 11ம் இடத்தில் குருவுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வது உங்கள் விருப்பம், ஆசை, அபிலாஷை பூர்த்தியாவதைக் காட்டுகிறது. மேலும் கேது 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சுபகாரியங்கள் வீட்டில் நடப்பதைக் குறிக்கும். அந்தச் சுப காரியம் நடப்பதில் சற்று தடையேற்பட்டாலும் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். எடுத்த காரியம் கைகூடும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற வாய்ப்புகள் வந்து சேரும்.
பேச்சில் இனிமையும் சாமர்த்தியமும்கூடும். கொடுத்த பணம் பொருள் வட்டியுடன் சேர்ந்து கிடைக்கும். பணச்சுழற்சியால் தொய்வில்லாமல் பொருளாதாரம் ஏற்றம் மிகுந்து காணப்படும். சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் அல்லது அவர்களுக்கு சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். அதே சமயம் போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். அவர்களால் நற்பலன்கள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் நன்மையேற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய சந்தர்ப்பம் அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். வீடு கட்ட அல்லது கட்டிய வீடு வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். கடன் வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். கொடுத்த பணம் வருவதில் சற்று தாமதம் ஆனாலும் பணம் வந்து சேரும். தாயாரால் ஆதாயங்கள் ஏற்படும். அவர்களின் அன்பும் ஆசியும் கிட்டும்.
விருந்து கேளிக்கைகளில் அதிக அளவு ஈடுபாடு ஏற்படும். உல்லாசப் பயணங்கள் அடிக்கடி செல்ல வாய்ப்பும் அதனால் மனமகிழ்ச்சியும் ஏற்படும். உற்சாகம் மிகும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யமும் குழந்தைகளால் நன்மைகளும் ஏற்படும்.
உடல் ஆரோக்யம், கடன், நோய், பிள்ளகளால் பிரச்சனைகள் ஏற்பட்டவர்களுக்கு அதிலிருந்து விடுபட்டு நல்ல மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ வழியேற்படும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் அமையும். காதல் கனிந்து திருமணத்தில் நடந்து முடிய வாய்ப்பு அமையும். தந்தையாரால் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள் சற்று இழுபறியாகவே நடந்தேறும் நண்பர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும் அவர்களால் நன்மைகள் ஏற்படும்.
உத்யோகம், வேலை (JOB)
இங்கு உத்யோகம் அல்லது வேலை என்பது அரசு மற்றும் தனியார் துறை இரண்டையும் குறிப்பிடுவதாகும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் அமையும். அதே சமயம் தேவையில்லாமல் யாரையும் பகைத்து பணிபுரிதல் வேண்டாம். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். போட்டித் தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். உயரதிகாரிகள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுதல் கூடாது. தனியார் துறையில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் நன்மைகள் ஏற்படும். இதுவரை தள்ளிப்போன “ஆன்சைட்” வாய்ப்பு வந்து சேரும். வேலையின் காரணமாக அடிக்கடி வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தாங்கள் பார்க்கும் வேலையில் திருப்தியில்லாத நிலை ஏற்பட்டாலும் அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடுதல் திருப்தியில்லாத கூடாது. எப்பொழுதும் எச்சரிகையுடனும் ஆர்வத்துடனும் பணிபுரிதல் வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு பிரச்சனையை தோலில் சுமத்தல் கூடாது.
தொழில் (BUSINESS) வியாபரம் (TRADE)
சிறுதொழில் புரிபவர்கள் சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறி தொழில்கள் சற்று லாபகரமாக அமையும். மேலும் உற்பத்தி சார்ந்த துறைகள் ஏற்றம் பெற்று காணப்படும். பங்குச்சந்தையில் ஓரளவு லாபம் ஏற்படும். அதே சமயம் ஷேர்மார்க்கெட்டில் முதலீட்டில் கவனமாக முதலீடு செய்தல் வேண்டும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வந்து சேரும். மருத்துவம், இராசயனம், பொறியியல், இரும்பு எஃகு, சிமெண்ட் துறைகள் லாபகரமாக அமையும். நிதி, நீதி, மற்றும் வங்கித்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். ஆடை, ஆபரணம், பிளாஸ்டிக், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஐ.டி. துறைகள் ஏற்றம் மிகுந்தும் கடல்சார் துறைகள் மீன்பிடித் தொழில்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள் ரியல் எஸ்டேட் ஏற்றம் மிகுந்தும் ஆசிரியர், ஜோதிடர், வக்கில்கள், ஆடிட்டர் தொழில்கள் லாபகரமாக அமையும்.
விவசாயம்
விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்கும். புதிய நிலம் அல்லது இடங்கள் வாங்க வாய்ப்புகள் அதிகரிக்கும் புதிய கடன் வாங்க வாய்ப்புகள் அமையும். பழங்கள் காய்கறிகள். நெல், கோதுமை இவற்றால் லாபம் கூடும். கரும்பு சுமாரகவே அமையும். பணச் சுழற்சிகள் எதிர்பார்த்த அளவு அமையும்.
அரசியல்
பொதுமக்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். அரசியல் வாழ்வு ஏற்றம் மிகுந்து காணப்படும். பொதுவாழ்வும் சமூகத்தில் மதிப்பு மரியாதையும் உயரும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமுடனும் வலம்வர உடல் ஆரோக்யம் நன்கு அமையும். அரசால் பிரச்சனைகளும் போராட்டங்களும் மனக்குழப்பங்களும் இருந்து கொண்டே இருக்கும். எதிர்கள் தலையெடுத்தல் வண்ணம் இருப்பார்கள். தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் சற்று குறைந்தே காணப்படும்.
கலைஞர்கள்
நாடகம்,இசை, சினிமா, நாட்டியம், ஓவியம், சிற்பம், இவைகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். பட்டகளும் விருதுகளும் ஒரு சிலருக்கு வந்து சேரும். புதிய ஒப்பந்தகள் ஏற்படும். சமூகத்தில் பெயர்புகழ் அந்தஸ்து கூடும். பணப்புழக்கம் சரளமாக இருந்தாலும் கடன் வாங்க வேண்டிய சந்தர்ப்பங்களும் வந்து அமையும். அடிகக்டி வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்துசேரும். சின்னத்திரையில் புதிய வாய்ப்புகள் எதிர்பாராமல் வந்து சேரும். ஓவியத்துறையில் இருப்பவர்கள் நல்ல பெயர் புகழ் பெறுவர். விளையாட்டு வீரர்கள் பெயர் புகழ் பெறுவர். ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்வர். ஜோதிடர்களுக்கு ஏற்றமான காலமிது. பணம் புகழ் வந்து சேரும்.
மாணவர்கள்
புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் விருப்பமும் கூடும். அதே சமயம் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் அமைவதில் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும். போக்குவரத்தில் கவனமுடன் சென்று வருதல் வேண்டும். படிப்பின் காரணமாக ஒரு சிலர் தாய், தந்தையரை விட்டுப் பிரிய நேரிடும். போட்டித் பந்தையங்களில் வெற்றி பெற்று பரிசுப் பொருட்கள் பெற வாய்ப்புகள் அமையும். உல்லாசங்களில் காலத்தைக் கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்துதல் வேன்டும்.
பெண்கள்
இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்புகள் அமையும். ஒரு சிலருக்கு புத்ரப்ராப்தியும் வந்தமையும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் லந்து கொள்ள வாய்ப்புகள் வரும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள சந்தர்ப்பங்கள் வந்து சேரும். புதிய உறுப்பினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் வந்து சேரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். அதனால் உடலில் அசதியும், சோர்வும் இனம் தெரியாத உடல் ஆரோக்யக் குறைவுகள் ஏற்பட்டுவிலகும். அடிக்கடி ஆலய தெய்வ தரிசனங்கள் அமையும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது. கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களால் வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் வந்து சேரும். உயரதிகாரிகளால் தேவையற்ற மன உலைச்சல்களும் வேதனைகளும் வந்து சேரும். சக ஊழியர்களின் நட்பும் அவர்களால் நன்மையும் உண்டாகும். “ஆன்சைட்” செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பும் அதனால் குடும்பத்தை விட்டுப் பிரியும் வாய்ப்பும் ஏற்படும்.
உடல் ஆரோக்யம்
உடலில் சர்க்கரை இருப்பின் அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும். இரத்த அழுத்தம் ரத்தக் கொதிப்பை சரிசெய்வது அவசியம். தேவையற்ற உணவுகளை உட்கொள்வதை தவிர்த்தல் அவசியம். உடலில் அடிக்கடி தலைசுற்றல் அடிவயிற்றில் தீராத வலி காலில் பிரச்சனைகள் எற்பட்டு விலகும். சின்னப் பிரச்சனை என்றாலும் உடனே ஒரு நல்ல மருத்துவரை பார்த்தல் அவசியம் ஆகும்.
அதிர்ஷ்ட எண் : 2, 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மஞ்சள்
அதிர்ஷ்ட நாள் : திங்கள், வியாழன்
அதிர்ஷ்ட இரத்னம் : முத்து, மஞ்சள் புஷ்பராகம்
பரிகாரம்
“சனிக்கிழமை” தோறும் “சனிபகவானை” வணங்கிவருதல் மற்றும் “ஆஞ்சேநேயரை” வணங்கிவருதல் நன்மைபயக்கும். அத்துடன் “புதன்கிழமை” தோறும் “சிவபெருமானை” வணங்கிவர எண்ணிய எல்லாம் இனிதே நடந்தேறும்.
- ஜோதிட இமயம் அபிராமி சேகர்
maduraiabiramisekar@gmail.com
9994811158
|