கட்டாய வாக்கு பதிவை நடைமுறை படுத்த வேண்டும் என பா.ஜ. கட்சியின் மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிடிக்காத பட்சத்தில், அவர்களை நிராகரிக்கும் உரிமை, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, வாக்கு பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களை நிராகரிப்பதற்கான, பொத்தான் அமைக்கப்பட உள்ளது. இது, நல்ல முயற்சி. இதேபோல், வாக்காளர்கள் வாக்கு அளிப்பதையும், கட்டாயமாக்க வேண்டும். ஓட்டு போடுவது, வாக்காளர்களின் அடிப்படை உரிமை. அதை, அவர்கள் புறக்கணிக்கக் கூடாது. குஜராத்தில், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ.க அரசு, வாக்களிப்பதை கட்டாயமாக்கி, சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது. ஆனால், இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. என அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
|