|
|||||
15 ஆண்டுகளுக்கு பின், முரசறைந்து, சங்கொலி எழுப்பி அதிகாலை பூஜை நடந்ததால் பக்தர்கள் பரவசம்! |
|||||
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, முரசறைந்து சங்கொலி எழுப்பி,அதிகாலை பூஜை நடந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில், தினமும் அதிகாலையில் விஸ்வரூப பூஜை நடக்கும். அப்போது கோசாலையில் இருந்து பசுவும், குதிரை நிலையத்தில் இருந்து குதிரையும் கோயிலுக்கு அழைத்து வரப்படும். இந்த நிலையில், அதிகாலை விஸ்வரூப தரிசனத்தில் பசு, குதிரையோடு முரசு அடித்தும், சங்கொலி எழுப்பியும் கேவண்டி அடித்தும் பூஜை நடைபெற்றது. இதனால், அதிகாலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து ஆண்டாள் கோயில் அர்ச்சகர் கூறியதாவது: ‘கோயிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனத்தின்போது கோதாஸ்சுதி பாடி, முரசு அடித்து, சங்கு ஊதி கேவண்டி அடித்து விஸ்வரூப தரிசனம் நடைபெறுவது வழக்கம். காலப்போக்கில் இந்த வழக்கம் நின்றுவிட்டது. இந்த நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்தினரிடம் மீண்டும் முரசு ஒலிக்க வேண்டும், சங்கொலி எழுப்ப வேண்டும், கேவண்டி அடித்து விஸ்வரூப தரிசனம் நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மீண்டும் சுமார் 15 வருடத்திற்கு பிறகு முரசு அடித்து, சங்கு ஒலிக்க ஏற்பாடு செய்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு பிறகு ராஜகோபுரத்தின் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது, தற்பொழுது சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகாலை முதல் பூஜையான விஸ்பரூப தரிசனத்தில் சங்கு ஒலித்தது, முரசு கொட்டியது, கோதாஸ்சுதி பாடி, கேவண்டி அடித்தது பக்தர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. |
|||||
by Mani Bharathi on 01 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|