பொதுவாக சப்தமாதர்கள் ஆலயம் வடக்குத் திசை நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இங்கு ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்திருப்பது சிறப்பு.கோயிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறம் மதுரை வீரன் சன்னதி உள்ளது. அதை அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் செட்டியப்பரின் வடிவம் உள்ளது. அர்த்தமண்டப நுழைவாயிலின் இருபுறமும் பிரமாண்டமான துவார பாலகிகளின் திருமேனிகள் அமைந்துள்ளன. கருவறையில் சப்தமார்கள் அழகுற அமைந்து திருக்காட்சியளிக்கின்றனர்.
இவர்களை வழிபடுவது மாங்கல்ய பலம் அளித்து, மஞ்சள் குங்குமம் நிலைக்கச் செய்யும் என்பது நம்பிக்கை.பிராகாரத்தில் யானை சிலையும், குதிரை சிலையும் சுதை வடிவில் காட்சி தருகின்றன. யானையின் மேல் ஐயனாரும் குதிரை மேல் கருப்பண்ணசாமியும் அமர்ந்திருக்கின்றனர். வராத கடன் திரும்பிவர கருப்பண்ணசாமிக்கும் அவர் சவாரி செய்யும் குதிரைக்கும் மாலை போட்டு பிரார்த்தனை செய்தால் அந்தக் கடன்வசூலாகிவிடும். |