LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

அம்ருதபுரியில் ஸ்ரீ நவக்கிரக விநாயகரின் சதுர்த்தி விழா!

ஸ்ரீ ராமானுஜரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. வைணவ மரபில் வந்தவர் என்றாலும், ஜாதி, மதம், இனம் பாராமல், "சேர வாரும் ஜகத்தீரே" என்று அனைவரையும் ஒருமுகப்படுத்தியவர்.

யோகவனம் என்றால் தபோவனம். ஸ்ரீ ராமானுஜரின் பெயரால் அமைந்த யோகவனம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகில் உள்ள படாளம் கூட்டு ரோட்டிலிருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில், 3வது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அம்ருதபுரியில் அமைந்துள்ளது.

ஶ்ரீ மத் ஸீதாராம் ஸ்வாமிகளால் உருவாக்கப்பட்டது இந்த யோகவனம். காஞ்சி ஶ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியினால் அவர் வழி காட்டிய பாதையில் ஸ்ரீ சீதாராம் சுவாமிகள் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றார்.

ஸ்ரீ ராமானுஜ யோகவனத்தில் ஸ்ரீநவக்கிரக விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நவக்கிரக விநாயகர் 9 கிரகங் களையும் தன்னுள் அடக்கி இருப் பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார். 

குருவை தலையிலும், சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், சனியை வலது மேல் கையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், செவ்வாயை வலது தொடையிலும், சுக்கிரனை இடதுகீழ்க்கையிலும், ராகுவை இடது மேல் கையிலும்,  கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். 

இவரை வழிபடுவதால், ஒரே நேரத்தில் நவக்கிரகங்களையும் வழிபாடு செய்த பலன் உண்டாகும். அது மட்டுமல்ல இவருக்குப் பின்புறம் ஸ்ரீ யோக நரசிம்மர் காணப்படுவது வேறெங்கும் காண முடியாத தனிச்சிறப்பு.

தமிழகத்திலேயே பிரம்மாண்டமாக அமைந்த நவக்கிரக விநாயகர் இவர் மட்டும் தான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவருக்கு சிறப்பு அபிசேக அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆவணி மாத சுவாதி கருடனுக்கு விசேஷம் என்பதால் கருடனுக்கும் அபிஷேகம் நடந்தது. கருடனுக்குப் பின்புறம் ஆஞ்ச நேயர் அமைந்திருப்பதுவும் சிறப்பு.

by Swathi   on 13 Sep 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள் பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்
திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்! திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்!
இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு! இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு!
கருத்துகள்
14-Sep-2018 03:18:20 S.P.SRINIVASAN said : Report Abuse
EXCELLENT. Keepitup.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.