|
||||||||
தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை |
||||||||
தென்னை விவசாயிகளின்; கருத்துக்கு தென்னை வைத்தால் தின்றுவிட்டு சாவோம்! பனையை வைத்தால் பார்த்துட்டு சாவோம்! என்ற பழமொழிக்கு ஏற்ப தென்னை வைக்க முன் வந்தார்கள். தென்னை ஓரளவுக்கு வறட்சியையும் தாங்;கி வளரக்கூடிய பயிர். மேலும் அதிக வேளையாட்கள் தேவைப்படாது. 3- 5 வருடங்கள் வரை ஊடு பயிர் வைத்துக் கொள்ளலாம். காயும் அறுவடை செய்ய உகந்தது 40 நாட்களுக்கு ஒருமுறை தேங்காயை அறுவடை செய்யலாம். தென்னை விவசாயத்தில் அதிக லாபம் பெற தேங்காயாக விற்பனை செய்வதை விட மதிப்பூட்டல் செய்து கொப்பரையாக விற்றால் அதைவிட பன்மடங்கு லாபத்தை ஈட்டித் தரக் கூடியது. பொதுவாக தென்னை விவசாயிகள் அவற்றை உருட்டு காண்ராக்டாக வியாபாரிக்கு கொடுப்பார்கள். வியாபாரிகள் தேங்காய் வெட்டும் பொழுது நன்றாக இருக்கும் காய்களை எடுக்துக் கொண்டு சிறிய காய்களை கழித்து போட்டு விடுவார்கள் அதனால் நமக்கு இழப்புதான். இதுமட்டும் அல்லாது கைகாய் என்று 100 காய்களுக்கு 5 காய் என்று எடுப்பார்கள். தேங்காய் விலைக்கு எடுக்கும் பொழுது ஒரு காய் ரூ 5 - 6 என்று தான் எடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் விற்பனை செய்யும் பொழுது ஒருகாய் 10 ரூபாய்க்கு விற்பனை செய்வார்கள்.இவற்றை தவிற்கவும் மேலும் கூடுதல் விலை பெறவும். தென்னை விவசாயிகள் அவற்றை கொப்பரை தேங்காயாக மதிப்பூட்டல் செய்து மாற்றி விற்பனை செய்தால் மேலும் அதிக லாபம் பெறலாம். கொப்பரையில்கிடைக்கும் லாபம் தேங்காயை உரித்து போடும் பொழுது உரிமட்டையையும் விற்பனை செய்யலாம். கொட்டாங்குச்சி ஒரு கிலோ ரூ. 10 க்கும் விற்பனை செய்யலாம். கொப்பரையாக காயவைத்து விற்றால் ஒரு கிலோ 100 - 105 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள். நமக்கு ஒரு காய் விலை 10- 15 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. 1000 தேங்காய் உரித்து போட்டால் 100 கிலோ பருப்பு கிடக்கும் தென்னை விவசாயிகள் தேங்காயாக விற்பனை செய்வதை விட்டு விட்டு கொப்பரை அல்லது எண்ணையாக மதிப்பூட்டல் செய்து அதிக லாபம் பெற முன்வருவோம். தென்னை மரம் வைத்திருப்போர் தினம் தினம் காற்று அடித்தால் அல்லது மரத்திலேறி காய் பறிக்க முடியாமல் இருந்தாலும் அந்த காய்கள் ஒவ்வொன்றாக கீழே விழும். அவற்றை சேர்த்து வைக்க முடியாமல் விற்றுவிடுவோம் அல்லது உறவினர்களுக்கு கொடுத்துவிடுவோம் நமக்கு முதல் சேராது. தேங்காயாக சில்லரையில் விற்பது கை வந்து சேராது இவற்றை தவிர்க கொப்பரையாக மதிப்பூட்டல் செய்யலாம். இது பழனிச்சாமி என்ற தென்னை விவசாயி கூறிய கருத்து.
நன்றி: Rsgaseed |
||||||||
by Swathi on 28 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|