நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானி, மாரடைப்பால் சரிந்த நிலையில், முன் அனுபவம் இல்லாத பயணி ஒருவர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.
இங்கிலாந்தில், ஹம்பர்சைட் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் சிறிய ரக விமானம் ஒன்று, பயணிகளுடன் கெக்னெஸ் என்ற இடத்துக்கு புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானிக்கு மாரடைப்பு வந்தது, உடனே, விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், விமானத்தை ஓட்ட முடியவில்லை என்றும் கூறிவிட்டு, சரிந்து விழுந்தார். உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தில் இருந்த பயணியிடம், விமானத்தை இயக்குவது குறித்து வழிகாட்டினர். அதன்படி, விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பயணி, அவசரமாக, தரையிறக்கினார்.
குறைந்த ஒளியின் காரணமாக, விமானம் பத்திரமாக தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும், விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளின், வழிகாட்டுதலின்படி, அந்தப் பயணி, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். பிறகு விமானியை மீட்டு பரிசோதித்ததில், விமானி இறந்திருப்பது தெரியவந்தது.
|