LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

வங்கி கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !

வங்கி கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை, ஐ.பீ.பி.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தேர்விற்கு பட்டதாரிகள் வரும் 7-9-2013 க்குள் விண்ணப்பிக்கலாம்.

 

இந்திய பொது துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய, வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் (ஐ.பீ.பி.எஸ்) பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களை பொறுத்து, பொது துறை வங்கிகள், பணி நியமன ஆணையை வழங்கும்.

 

கல்வி தகுதி :

 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் வேலை செய்யும் திறம் பெற்றவராக இருக்க வேண்டும்.

 

வயது வரம்பு :

 

இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். 

 

விண்ணப்பதாரர் 2-8-1985 மற்றும் 1-8-1993 ஆகிய தேதிகளுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். (20 வயதை கடந்தவராகவும், 28 வயதை கடக்காதவராகவும் இருக்க வேண்டும்)

 

அரசு விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், ஊனமுற்றோர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

 

விண்ணப்ப கட்டணம் :

 

பொது மற்றும் ஒ.பி.சி பிரிவினர் : 600

 

எஸ்.சி, எஸ்.டி, ஊனமுற்றோர், மற்றும் முன்னால் படை வீரர்கள் ஆகியோர்களுக்கு : 100 

 

ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய இருமுறைகளிலும் பணம் செலுத்தலாம்.

 

தேர்வு செய்யும் முறை :

 

விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் பொது எழுத்து தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் பொது நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இரு தேர்வுகளிலும் பெரும் மதிப்பெண்களுக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும்.

 

முக்கிய தேதிகள் :

 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்பமாகும் நாள் : 19-8-2013

 

விண்ணப்பிக்க கடைசி நாள் - 7-9-2013

 

ஆப்லைன் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் - 12-9-2013

 

மேலும் விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

by Swathi   on 19 Aug 2013  1 Comments
Tags: IBPS Exam   Bank Clerk Exam   வங்கி தேர்வு   வங்கி கிளார்க் தேர்வு           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
19-Aug-2013 09:30:37 dhakshinamoorthi. b said : Report Abuse
is this right way from reach all people
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.