|
||||||||
வங்கி கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் ! |
||||||||
வங்கி கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை, ஐ.பீ.பி.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தேர்விற்கு பட்டதாரிகள் வரும் 7-9-2013 க்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய பொது துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய, வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் (ஐ.பீ.பி.எஸ்) பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களை பொறுத்து, பொது துறை வங்கிகள், பணி நியமன ஆணையை வழங்கும்.
கல்வி தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் வேலை செய்யும் திறம் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 2-8-1985 மற்றும் 1-8-1993 ஆகிய தேதிகளுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். (20 வயதை கடந்தவராகவும், 28 வயதை கடக்காதவராகவும் இருக்க வேண்டும்)
அரசு விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், ஊனமுற்றோர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் :
பொது மற்றும் ஒ.பி.சி பிரிவினர் : 600
எஸ்.சி, எஸ்.டி, ஊனமுற்றோர், மற்றும் முன்னால் படை வீரர்கள் ஆகியோர்களுக்கு : 100
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய இருமுறைகளிலும் பணம் செலுத்தலாம்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் பொது எழுத்து தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் பொது நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இரு தேர்வுகளிலும் பெரும் மதிப்பெண்களுக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும்.
முக்கிய தேதிகள் :
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்பமாகும் நாள் : 19-8-2013
விண்ணப்பிக்க கடைசி நாள் - 7-9-2013
ஆப்லைன் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் - 12-9-2013
மேலும் விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும். |
||||||||
by Swathi on 19 Aug 2013 1 Comments | ||||||||
Tags: IBPS Exam Bank Clerk Exam வங்கி தேர்வு வங்கி கிளார்க் தேர்வு | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|