ஒரு காட்சியின் போக்கில் தனக்கான இடத்தை தக்கவைப்பதும், தன்னை திரும்பி பார்க்க வைப்பதும் வெகு சிலநடிகர்களே. அத்தந்திரத்தை அறிந்த நடிகர்களில் ஒருவர் கருணாகரன். இந்த வருடத்தில் ஜிகர்தண்டா, யாமிருக்கபயமே, ஆடாம ஜெயிச்சோமடா, லிங்கா என வெற்றி படங்களை தொடர்ந்து விரைவில் வெளி வர இருக்கும் ‘கப்பல்’படத்தை எதிர்பார்த்து இருகிறார் நடிகர் கருணாகரன்.
“ ‘கப்பல்’ படத்தில் கனகா என்னும் கிராமத்து இளைஞனாக வருகிறேன். காதல், கல்யாணம் ஆகிய விஷயங்கள்அறவே வெறுக்கும் கனகா. வைபவ்- சோனம் பாஜ்வா காதலுக்கு எதிராய் சிறு சிறு திட்டங்கள் தீட்டும் கூட்டத்தின்தலைவன். “
“ ‘ஊர விட்டு ஊரு வந்து...’ பாட்டுக்கு உயிர்??? கொடுத்து ஆடியது மறக்க முடியாத ஒன்று. இப்படத்தில் வைபவ்-சோனம் பாஜ்வா ஜோடியை பிரிக்கும் பாவமோ என்னமோ , எனக்கு கல்யாணம் ஆன மறுநாள் காலை 5 மணிக்கேஷூட்டிங் வெச்சிடாங்க. ஹனி மூன் எங்க என்று கேட்டவங்க கிட்ட எல்லாம் 'கப்பல்'ல்லன்னு சொல்லி சமாளிச்சேன்.ஆனா நடந்தது என்னவோ தனி மூன் தான்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
“இப்படத்தை பார்த்த டைரக்டர் ஷங்கர் சார் மற்றும் அவங்க மனைவி என்னை வெகுவாக பாராட்டினார்கள். நானும் ’S’பிக்சர்ஸ் படத்துல நடிச்சிருக்கேன்னு சட்டை காலரை தூக்கி விட்டுக்கலாம். இந்த கப்பலில் எனக்கும் இடமளித்த ‘I’ஸ்டுடியோஸ் நிறுவனத்தார்க்கு “காசு பணம் துட்டு Money” வர வாழ்த்துக்கள் ” என்றுக் கூறினார் கருணா.
|