LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    தோட்டக்கலை Print Friendly and PDF

கொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி?

பரங்கி, பாகல், பீர்க்கு, புடலை, சுரை, வெள்ளரி போன்ற கொடிவகை காய்கறிகள். இது போன்ற கொடிவகை காய்கறிகளில் பூக்கள் பெருமளவு தோன்றினாலும், பூக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு காய்கள் உருவாவதில்லை.


இதற்கு காரணம் அதிக அளவு ஆண் பூக்கள் உற்பத்தியாவதே ஆகும்.


பொதுவாக 15 முதல் 25 ஆண் பூக்களுக்கு ஒரு பெண் பூ என்ற விகிதத்திலேயே பூக்கள் தோன்றும்.


ஆண் பூக்கள் பூக்காம்பின் நுனியிலும், பெண் பூக்கள் பிஞ்சுகளின் நுனியிலும் தோன்றும்.


பெண் பூக்களின் எண்ணிக்கை யை அதிகப்படுத்தி மகசூலை அதிகப்படுத்துவதற்கு வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்துவது அவசியமான தொழில்நுட்பமாகும்.


இதற்கு எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியினை 250 பி.பி.எம்., அதாவது 10 லிட்டர் நீருக்கு 2.5 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்த விதைப்பு செய்த 15, 22, 29, 36வது நாட்களில் தெளிக்க வேண்டும்.


இவ்வாறு செய்வதன் மூலம் பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.


பரிந்துரைக்கப்பட்ட பேரூட்ட உரங்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் காய்கறி நுண்ணூட்ட கலவையினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து விதைத்த 30, 45 மற்றும் 60 வது நாட்களில் இலை வழியாக தெளிப்பதன் மூலம் பிஞ்சுகள் பழுத்து உதிர்வது தவி ர்க்கப்பட்டு தரமான காய்களை அதிக அளவில் பெற முடியும்.


இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட ரோவர் வேளாண் அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

by Swathi   on 20 Mar 2014  2 Comments
Tags: கொடிவகை காய்கறிகள்   Vine Vegetables                 
 தொடர்புடையவை-Related Articles
கொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி? கொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி?
கருத்துகள்
24-May-2015 06:50:26 JANAKIRAMAN I said : Report Abuse
THIS WEB SIDE IS VERY உசெபுல் மிக்க நன்றி
 
13-May-2015 23:50:40 பிரபாகரன் said : Report Abuse
இயற்கை விவசாயம் .தோட்டக்கலை நன்று
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.