கடந்த சில வருடங்களுக்கு முன், விஜய் இயக்கத்தில், ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் மதராசப்பட்டினம்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன், தனக்கென ஒரு தனி அடையாளத்தை தமிழ் சினிமாவில் பதித்து விட்டார். இந்நிலையில் மதராசப்பட்டினம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆர்யாவும், இயக்குநர் விஜய்யும் இணைந்து ஒரு படம் பண்ணப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இயக்குனர் விஜய், விக்ரம் பிரபுவை வைத்து, இது என்ன மாயம் படத்தை இயக்கி வருகிறார். அதேப்போல் ஆர்யாவும், புறம்போக்கு, யட்சன், மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சுவங்க படங்களில் பிஸியாக இருக்கிறார். இருவரும் அவர்களது படங்களை முடித்த பின்னர் இந்த புதிய படத்தில் இணைவார்கள் என தெரிகிறது. விரைவில், இந்த புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|