LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47

விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்

கண்ணீர்க் கோளங்களிலிருந்து (Lachrymal glands) சுரக்கும் நீர் கண்களைக் குளிர்வித்து, தூய்மைபடுத்தி, கண் இமைகளுக்கும்  கண்களுக்கும் இடையே உராய்வினைத் தடுக்கும்.  இது உப்பு கலந்த நீர்.  கண் எரிச்சல் ஏற்பட்டாலோ (response to irritant) மனிதன் உணர்வு மாறுபாடுகள் (தூக்கம், மகிழ்ச்சி, கோபம், சிரிப்பு) ஏற்பட்டாலோ கண்ணீர் சுரக்கும்.

 

கண்களிலிருந்து சுரக்கும் நீர் பலவிதமான நன்மைகள் ஏற்படுத்துவதால் அதனைத் தொடர்ச்சியாகச் சுரக்கச்செய்ய சித்தர்கள் பலவிதமான வழிமுறைகளைக் கூறியுள்ளனர்.  நாம் கண்பதுகாப்பின் கீழ் பார்த்த பல முறைகள் கண்ணீர் சுரப்பினை இயல்பகச் சுரக்கச் செய்து கண் பாதுகாப்பிற்கு மட்டும் அல்லாது பொதுவான உடல் நலத்திற்கும் உதவியாக இருக்கும்.  குறிப்பாக பெண்கள் கண்மையிடல், எல்லோருக்கும் கண்ணில் மூலிகைச் சாறுகள் விடல், எண்ணை விடல் போன்றவை. இவ்விதமான கண்ணீர் சுரப்பினை சீராகச் சுரக்கச் செய்யும் வழி முறைகளைப் பின்பற்றாவிட்டால் கண்ணீர் சுரப்பு குறையும். கண்ணீர் குறைவாகச் சுரக்கச் செய்யும் செயல்களில் ஈடுபடுவதும் நல்லதல்ல (காட்டாகத் தொடர்ச்சியாக தொலைக்காட்சி போன்ற மின் சாதனங்களைப் பார்த்துக் கொண்டிருத்தல்). விழி நீரினைத் தடுப்பதால் ஏற்படும் நோய்களைக் கீழ்க்கண்ட சித்தர் பாடல் தெரிவிக்கின்றது.


     “விழியினில் நீரடக்கில் விதமான இருந்து ரோகம்

     வழியடு பீநசங்கள் வந்திடும் நேத்ர ரோகம்                  

     அழுகிடும் சிரசில் ரோகம் அதனுடன் வாதங் கூடில்

     பழுதுடுடல் பண்ணிக் குன்மம் பற்றிடுங் குணமுமுண்டே””.


இதய நோய்கள், பீனிச நோய்கள் (Sinusitis), கண்நோய்கள், தலைபாரம், மூளை பாதிப்பு, உடல் தளர்வு, வயிற்றுபுண் போன்றவை கண்களிலிருந்து வழியும் நீரினைத் தடுத்தால் உருவாகும் என இந்த சித்தர் பாடல் விளக்குகின்றது. 

 

1. விழிக்கோளத்தில் உருவாகும் நீர் குறைவதால் கண் வறட்சி ஏற்படும் (De hydration).  கண் வறட்சியால் கண்ணில் புண்கள் ஏற்படல், கண் சிவப்பு, போன்ற சிறிய பிரச்சனைகள் முதல் பார்வை இழப்பு வரை ஏற்பட வாய்ப்புள்ளது. 

2. கண்ணீர் நுண்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும். கண்ணீர் 95% நுண்கிருமிகளை (microbes bacteria, virus)  5 முதல் 10நிமிடங்களுக்குள் நீக்கிவிடும். 

3. கண்களில் படக்கூடிய தூசு, புகை போன்ற வேதிப்பொருட்கள் கண்ணீரினால் வெளியேற்றப்பட்டு கண்பாதிப்பு தடுக்கப்படுகின்றது. 

4. கண்ணீரினால் உடலிலிருந்து நச்சுப்பொருட்கள் வெளியேறும் (detoxification). 

5. படபடப்பு, பதற்றம், மன எரிச்சல், சோர்வு, துக்கம், மன அழுத்தம், கோபம் போன்ற மன மாறுபாடுகளை உண்டாக்கக் கூடிய வேதிப்பொருட்கள் கண்ணீர் வழியே வெளியேறுகின்றது.  கண்ணீர் வெளியேறுதல் என்பது உணர்வு மண்டலம், மூளை, இதயம் போன்ற உறுப்புகளுடன் தொடர்புடையது.  எனவே மேற்கண்ட மன மாறுபாடுகளின் போது கண்ணீர் வெளியேறுவதால் மன ஆறுதலும் அமைதியும் கிடைக்கின்றது. 

6. கண்ணீர் வெளியேறுவதால் மனதில் அன்பு, பாசம், கருணை மேம்படும்.  இதற்கு  Oxytocin  என்கிற வேதிப்பொருள்  உடலில் கூடுவதே காரணம்.  அதே வேளையில்  Cortisol  போன்ற மன  இறுக்கத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் வெகுவாகக் குறைகின்றன. 

7. உடம்பின் எதிர்பாற்றல் மேம்படுகின்றது. 

8. ஒவ்வாமை  (Allergies) ஏற்படுத்தும் காரணிகளிலிருந்து உடல் பாதுகாக்கப்பட்டுகின்றது.  இதனால் கரப்பான் (Eczema), தோல் அரிப்பு (urticaria) போன்றவை குறைக்கின்றன.

இயல்பாக கண்களிலிருந்து வழியும் நீரினை தடுக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. (தொடர் கண் விழிப்பு, தொலைகாட்சி, அலைபேசி போன்ற மின் சாதனங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தல்).  கண்களிலிருந்து வழியும் நீர் சீராக உருவாகும் சித்தர் வழிகளைப் பின்பற்றல் வேண்டும்.      

by Swathi   on 03 Aug 2015  1 Comments
Tags: Tears   to Control Tears   Kanneer   Siddha Maruthuvam   சித்த மருத்துவம்   கண்ணீர்   விழிநீர்  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!! நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!
கண்ணீர் கவிதை - கவிப்புயல் இனியவன் கண்ணீர் கவிதை - கவிப்புயல் இனியவன்
ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்..
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
கருத்துகள்
23-Jan-2017 23:06:42 poornima said : Report Abuse
நல்ல கருத்து நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.