LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48

விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள்

     கீழ் நோக்கும் காற்று (அபான வாயு) என்கிற உடலின் காற்று சிறுநீர், மலம், விந்து, கருப்பையில் இருக்கும் குழந்தை இவற்றை குறிப்பிட்ட காலத்தில் கீழ் நோக்கித் தள்ளும்.

     இதனை

     “ நெளிந்திட்ட வாதம் அபானத்தைப் பற்றி

       மணமான விந்து விழ மழைநீர்ப் பெய்ய வழிகாட்டி””

என்கிற பாடலால் நாம் அறியலாம்.

     அபான வாயுவின் இயக்கத்தால் குறிப்பிட்ட நேரத்தில் தேவையான உடல் நிகழ்வுகள் நிகழும்.  மலம், சிறுநீர், விந்து போன்றவற்றை அடக்கினால் அந்த காற்றின் இயல்பான இயக்கம் பதிக்கப்பட்டு உடலில் பல கேடுகள் நிகழும்.

     விந்து வெளியேறும் காலத்தில் வெளியேறாமல் தடுப்பதால் பல துன்பங்கள் உடலில் நிகழும்.  அவற்றைக் கீழ்க்கண்ட சித்தர் பாடலால் அறியலாம்.

     “சுக்கிலம் தன்னை அடக்கின்

     சுரமுடன் நீர்க்கட்டு ஆகும்    

     பக்கமாம் கைகால் சந்து 

     பாரநோய் வழி இறங்கும்

     மிக்க மார்நோய்  உண்டாகும்

     மிகுத்திடும் பிரமேகம்தான்

     தக்கதோர் போதுமாகின்

     தரித்திடும் வாயுக்கூரே””

     சுக்கிலம் என்பது விந்து ஆகும்.  விந்து வெளியேறும்  காலத்தில் அடக்கினால் 

1. சுரமுடன் சிறுநீர் பிரியாத நிலையும் ஏற்படும். 

2. கை, கால், இடுப்பு சந்துகளில் (மூட்டுகளில், பொருத்துக்களில்) வலியும் வீக்கமும் உண்டாகும். மார்புநோய் உண்டாகும் என பாடல் தெரிவிக்கின்றபடியால் மார்பில் உள்ள முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல், இரத்தக் குழாய் போன்றவற்றில் நோய் ஏற்படும் என நாம் அறிந்து கொள்ளலாம். 

3. மேக நோய் என்று சித்தர்களால் அழைக்கப்படும் சிறுநீர் தொடர்பான நோய்கள் உண்டாகும்.  இவற்றில் மது மேகம் எனப்படும் சர்க்கரை நோயும் (Diabetes mellitus)  அடங்கும்.

விந்து வெளியேறும் காலம் என்பது ஆண் – பெண் உடல் தொடர்பின்போது ஏற்படும் உயர் உணர்வு ( Orgasm ) காலம் ஆகும். இந்த காலத்தில் விந்துவை அடக்க முற்படக் கூடாது.

by Swathi   on 10 Aug 2015  3 Comments
Tags: Siddha Maruthuvam   Vinthu   Semen   Sperm   விந்து   சித்த மருத்துவம்   to Control Semen  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
17-Aug-2020 13:13:37 Vignesh said : Report Abuse
சில ஆலோசனை கேட்க வேண்டும். தொடர்பு என்??
 
23-Mar-2016 01:11:53 ilayaraja said : Report Abuse
ஹாய் சூப்பர்
 
24-Dec-2015 05:18:27 Rajiv said : Report Abuse
Dayapatik
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.