LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (25 – 02 – 2018 முதல் 03 - 03 – 2018 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர்

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளவும். மனக் கவலைகள் அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும். மனைவியிடம் மட்டுமல்லாமல் நண்பர், மற்றும் உறவுகளிடம் கருத்து முரண்பாடுகளைத் தவிர்த்தால் நிம்மதி பிறக்கும். பெண்களால் முழுமையான சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரித்து, உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். நற்செயல்களை செய்ய முற்படுவீர்கள்.
பரணி
இந்த வாரம் மனதில் எண்ணியது எண்ணியபடி நடக்கும். வீட்டு விசேஷங்களுக்காக வெளியில் அலைந்து திரியும் நிலை ஏற்படும். உடன்              பிறப்புக்களின் நடவடிக்கைகள் சஞ்சலத்தைத் தரும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை நிலவும். பணிபுரியும் இடங்களில் வேலைப்பளு அதிகமானாலும், அதற்கேற்ற ஆதாயம் இருக்கும். தொழில் வகையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் ஒரளவு சமாளித்து விடுவீர்கள். ஒரு சிலருக்கு  அசதியும், உடல் பாதிப்பும் ஏற்படலாம்..
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் மற்றவர்கள் புகழ வேண்டும் எனபதற்காகவே, கடினமான காரியங்களையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். அதேபோல் பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். காவல்துறை, இராணுவம் போன்ற சீருடைப் பணியாளர்களுக்கு சீரிய சேவைக்கான பதக்கங்கள், பாராட்டுக்கள் கிடைக்கும்.  வாகனங்களை இயக்கும் போது அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இயக்கவும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் புத்திர பாக்கியத்தால் ஒரு நபரை ரேஷன் கார்டில் சேர்க்கும் பாக்கியம் ஏற்படலாம். நெடுநாட்களாகப் பெண் தேடி அலைந்தவர்களுக்குத் திருமணம் உறுதியாகி, அதன் காரணமாக ஆகாயத்தில் மிதப்பார்கள். உங்களின் அன்பு மிக்க செயல்களால், உறவுகள் மகிழ்ச்சி கொள்வர். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தாங்களே சமாளித்துக் கொள்வர்.  சிலருக்கு வீட்டில் ஏற்படும் சச்சரவுகளைச் சமாளிக்க முடியாமல் போகலாம்.
ரோகிணி
இந்த வாரம் எதிர்பார்த்ததை விட அதிக தனவரவு உண்டாகும். குடும்பத்தில் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வர். செல்வாக்கு மிக்கவர்களின் புதிய நட்பால் உங்கள் எதிர்காலம் ஒளிமிகுந்ததாகும். சிலருக்கு அரசுப் பணியில் பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றங்கள் ஏற்படலாம். அதன் காரணமாகக் குடும்பத்தை விட்டுப் பிரியும் நிலை ஏற்படலாம். பெற்றோர்கள், உற்றார் உறவினர் ஆகியோர், உங்கள் அசாத்திய முன்னேற்றம் கண்டு பெருமிதம் கொள்ளுவர்.  எல்லாக் காரியங்களுமே வெற்றிகரமாக நடக்கும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். உங்களின் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து பணிவிஷயமாக எதிர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். கேளிக்கை விடுதிகளில், ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும். வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் தேவையான பணவரவுகள் இருக்கும். பிறரிடம் இருந்து பணவுதவிகள் கிடைத்துச் சிக்கல்கள் தீரும். சிலருக்குத் தந்தைவழி உறவுகளால் சங்கடங்களும், தொல்லைகளும் ஏற்படும். அரசு ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி நடப்பதும், அவர்கள் சொல்லுக்கு மறுபேச்சுப் பேசாமல் பணிந்து நடப்பதும் பணியில் முன்னேற்றங்களைத் தரும். பயணங்களின் போது பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாப்பதன் மூலம் இழப்பைத் தவிர்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
திருவாதிரை
இந்த வாரம் பணவரவு தடையின்றிக் கிடைப்பதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பேரின்பம் பெறும் விதமாக மனைவி ழுழுகாமல் இருக்கும் சேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும் அளவுக்கு உங்கள் புகழ் ஓங்கும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசான வாகனத்தில் உல்லாச சுற்றுலாப் பயணங்கள் செல்வதின் காரணமாக உள்ளம் மகிழும்.  கோவில் திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும். அதன் மூலமாக மனதில் அமைதி நிலவும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம், தொழிலைப் பொருத்தவரை சிறு தடைகள் ஏற்படலாம். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதிகள் அதை மறந்து, இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு செலுத்தும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம், சேட்டைகள் கண்டு எசிச்சலுடன் கூடிய  மனமகிழ்ச்சி ஏற்படலாம்.  சிலருக்குப் புத்திர பாக்கியம்  ஏற்படலாம். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்.

இந்த வாரம் உங்களது வாழ்க்கையில் தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்டல் என தெய்வீக வாரமாக அமையும். அதன் காரணமாக சங்கடங்கள் தீர்ந்து, மனதில் ஓர் ஏகாந்தமான அமைதி நிலவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வருமானம் இருக்கும். உறவினர் வருகை, விருந்தால் மகிழ்ச்சி, கேளிக்கைகளால் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். தாய், மனைவி எனப் பெண்களால் இலாபமும், நன்மைகளும் ஏற்படும் உறவுகள் மத்தியில் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.
பூசம்
இந்த வாரம்  உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும். அறிவுத் திறனும் கூடும். சிலர் பணவிஷயங்களில் ஏமாற நேரலாம். எச்சரிக்கை தேவை. நல்லவர்களுடன் பழகுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு வீரதீர செயல்கள் செய்தமைக்காக அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  வாக்குவன்மை ஓங்கும்.  சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.
ஆயில்யம்
இந்த வாரம் உங்களுக்கு தந்தை வர்க்கத்தினரால் அனுகூலம் இருக்கும்.  பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய தொடர்புகளால் நன்மையும் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். மனோதைரியம் ஓங்கும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  வாக்குவன்மை ஓங்கும்.  புதிய வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் திருமணம், சந்ததி விருத்தி ஆகியவை ஏற்படலாம்.  சகோதரரால் நன்மைகள் உண்டு. சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு தலைமைப் பதவிகள் தேடிவரும். வீரம் பெருகும். தங்கள் சேவைகள் அங்கீகரிக்கப்படும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். கௌரவப் பட்டங்கள் பதவிகள் கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.
பூரம்
இந்த வாரம் அன்றாட வருமானத்தில் வளர்ச்சி இருக்கும். வங்கிக் கணக்குகளில் கையிருப்புக் கூடும். சிலருக்கு மனை வாங்கும் யோகம் ஏற்படும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான அனுகூலமான பதில்கள் அரசிடமிருந்து  கிடைக்கும். எழுத்தாளர்களுக்கு தங்கள் தொழிலில் ஏற்றம் ஏற்படும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.  சிலர் நடக்கும் போதே கீழே விழுந்து எழ நேரும். எனவே, எச்சரிக்கை தேவை. உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் பணிகளில் தடை, தாமதங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு  விளைச்சல், அறுவடை அமோகமாக இருக்கும். அதன் காரணமாக அவர்களின் வருமானம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளைக் கருணை உள்ளத்தோடு அணுகுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை மறுக்காமல் வாங்கிக் கொடுங்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரும்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரத் துவக்கத்தில் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். சிலருக்குத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். வியாபரிகளே, வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். அதிக உழைப்புக்குப் பிறகே எடுத்த காரியங்கள் ஈடேறும்.  பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும்.  அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.  வாகனயோகம் உண்டு. சில மாணவர்கள் கல்வியில் உயர்நிலை எய்துவர்.
ஹஸ்தம்
இந்த வாரம் வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கம் மூலமாக எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும், அதிகாரிகளின் அனுசரணையால் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தார்  விரும்பிய பொருட்களை எல்லாம் உடனே வாங்கித் தருவீர்கள். சுகமும் ஆரோக்கியமும் பெருகும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்குத் தங்கள் விருப்பம் போல் உயர்ரக வாகனங்கள் கிடைத்து, பயணங்களும் இனிதாகும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே ? கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். அரசுப் பணிகளில் சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். வியாபார சம்பந்தமாக  வெளிநாட்டுப் பயணங்களும், அதனால் ஆதாயங்களும் ஏற்படும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசு மரியாதை கிட்டும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்குப் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். திடீர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம். பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரலாம். இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். புதிய தொழில் தொடங்க, எதிர்பார்த்தபடி அரசு உதவிகள், கடனுதவிகள் ஆகியவை அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.
சுவாதி
இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். பெண்களால் இலாபம், வீட்டில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல், தனசேர்க்கை ஆகியவற்றால் வரும் இன்பத்திற்கு அளவே இருக்காது.. சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் எண்ணமெல்லாம் பணத்தைப் பற்றியதாகவே இருக்கும். அரசு தொடர்பான விவகாரங்களில் தொல்லை ஏற்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் நல்ல பண்பாளர்களின் நட்பு கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்.  பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை வாங்குவீர்கள். பெரிய இடத்துப் பெண்   மனைவியாக அமைவாள்.  பங்களாப் போன்ற பெரிய வீடும் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் தொடர்பால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். எப்போதும்  மனதில் ஏற்படும் தெய்வ சிந்தனையால் மனநிம்மதி கூடும். சோதனைகள் அனைத்தையும் சாதனைகள் ஆக்குவீர்கள். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
அனுஷம்
இந்த வாரம் பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். எதிர்பாராத தனவரவு, புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்படும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.  பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். தொழிலில் விரிவாக்கங்கள் செய்வதினால் அசாத்திய வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவி மற்றும் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும்.  பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.
கேட்டை
இந்த வாரம் செல்வத்துக்கு அதிபதியான அலைமகளே உங்களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் மகிழமாட்டீர்களா ? தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, இலாபமும் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு அரசு சிபாரிசால் பல நாட்களாகத் தள்ளிப் போன, அதிகாரம் மிக்க பதவிக்குப் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் மெச்சப் படுவீர்கள். பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்து புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம்
இந்த வாரம் அன்பு மனைவியின் பணிவிடை அகமகிழ்ச்சி தரும். பொது இடங்களில் மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். ஓய்வெடுக்கும் விதமாக நமக்கு எல்லா நாட்களும் ஞாயிறாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. இந்த வாரம் வருமானம் அதிகமானாலும் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு.
பூராடம்
இந்த வாரம் திருமண வயது வந்தும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் பெற்றோர்களால் மேற்கொள்ளப்படும். நல்ல விஷயங்களுக்காக அலைச்சல்கள் ஏற்படும். நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் வழி பிறக்கும். குடும்பத்தில் நல்ல  முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் வரலாம். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். வேளாண் பொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான செய்தி வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.
திருவோணம்
இந்த வாரம் புதிய வசதி வாய்ப்புகள் உருவாகும். பக்தி மார்க்கத்தில்  தீவிர ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  அதிக இலாபம் கிடைக்கும். சிலருக்குக் காரியத் தடைகளும், வழக்கு வியாஜ்ஜியங்களும் ஏற்படலாம். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். வீண் ஆசைகளை விலக்கி வைப்பது நல்லது. விவசாயிகளுக்கு வளம் கொளிக்கும் வயல்களால் வசதிகள் பெருகும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். அனைத்துக் காரியங்களிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்தும் கௌரவமும் கூடும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். சிலருக்கு உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை வரவுகள் அதிகமாகி திருப்திகரமானதாக இருக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உபகாரங்கள் தடைப்படாது. தொழில், வியாபாரத்தில் எடுக்கும் புதுப்புது  முயற்சிகள்யாவும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். சிலருக்குப் புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான நவீன, உயர்ந்த ரக வாகன வசதிகள் அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.
சதயம்
இந்த வாரம் வியாபாரத்தில் நல்ல ஆதாயம் பெற, புதிய திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள்.  பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்தநாள் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும். மனம் எப்போதுமே மகிழ்ச்சியால் நிரம்பி வழியும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறிகாட்டப்படுகிறது. வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும்.
பூரட்டாதி -1,2,3 பாதங்கள்
இந்த வார ஆரம்பத்தில் வீட்டுக்கான செலவுகள் அதிகரிக்கும். பின்னர், திருமகளின் கருணையால் ஓரளவுக்குப்  பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். நவீன வசதிகளுடன் கூடிய புதிய இருசக்கர வாகனம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். பிறரைக் கவர பலவழிகளில் உங்களை நீங்களே அழகுபடுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் குடும்பத்தையும், பணியையும் ஒரு சேர பார்ப்பதில் இடைச்சல்கள் ஏற்படும். வெளியூர்ப் பயணங்களால் அசதி ஏற்படும்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் தாராளமான தனவரவு வரும்.  மனதில் தத்துவ உபதேசங்கள், பக்திச் சொற்பொழிவு கேட்பதில் ஆர்வம் ஏற்படும். அதன் காரணமாக மனதில் மிகுந்த உற்சாகமும் அமைதியும் பெருகும். நவநாகரீக உடைகள், ருசியான உணவு வகைகள் ஆகியவை கிட்டும்.  தொட்டில் ஆட்டிக் கொஞ்சி மகிழ, புத்திர பாக்கியம் ஏற்படும். சினத்தை அடக்கினால் சிக்கல்கள் தீரும். செலவுகள் அதிகமாகி புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். தீய குணம் உள்ளவர்களால் பயம் ஏற்படும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும். மனைவியுடனான உறவு  மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். முன்னர் சேமித்த சேமிப்புக்களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். அரசு வகை  ஆதாயம் ஏற்படும். வங்கிகள் மூலமாகக் கிடைக்கும்  உதவிகளால் புதிதாகத் தொழில் தொடங்கி ஆதாயம் காணும் நிலை ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும்.
ரேவதி
இந்த வாரம் மனைவிமார்கள் தங்கள் கணவரிடமிருந்து உண்மைக் காதலையும், உன்னத அன்பையும் பெறுவர்.  அரசுப் பணியாளர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும்.  கல்வித் தரம் உயரும்.

by Swathi   on 01 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை
இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.