நாட்டில் வசித்து வரும் மக்களில் சுமார் 551 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற விகிதத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் அனில் கோஸ்வமாமி கூறியிருப்பதாவது,
இந்தியா முழுவதும் கடந்த ஏழு ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 15.38 சதவீதமாக உள்ளது. அதேசமயம் போலீசாரின் வலிமை 0.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2002-ம் ஆண்டில் 718 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற நிலை மாறி 2012-ம் ஆண்டு 551 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற நிலை காணப்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த 2002-ல் போலீசாரி்ன் எண்ணிக்கை 3.48 லட்சம ஆக இருந்தது. அவை 2012-ம் ஆண்டில் 4.62 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் , வகுப்புவாத வன்முறை போன்றவை அதிகரித்துள்ளதும் ஒரு காரணமாகும் என உள்துறை அமைச்சக செயலர் கோஸ்வமாமி கூறியுள்ளார்.
|