சமீபத்தில் சென்னை மாநகராட்சி பகுதியில் அம்மா திரையரங்கங்கள் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.
தற்போது இந்த அம்மா தியேட்டர்கள் திறந்தவெளி தியேட்டர்களாக அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கட்டிட நிபுணர்களுடன் மேயர் சைதை துரைசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்கட்டமா ஒரு மண்டலத்திற்கு ஒரு திறந்தவெளி தியேட்டர்கள் கட்டப்படுகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர் பாணியில் இந்த தியேட்டர்கள் அமைக்கப்படுகிறது.
தியேட்டரின் உள்ளேயே கடைகள், சிற்றுண்டி சாலைகள் இருக்கும். மக்கள் சிற்றுண்டி அருந்தியபடியே படம் பார்க்கலாம். தனித்தனி கழிப்பிட வசதியும் செய்யப்படுகிறது.
வெளியாகும் புத்தம் புதிய படங்களை மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் கண்டு மகிழும் வகையில் இந்த தியேட்டர்கள் அமைக்கப்பட இருக்கிறது.
|