LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது!

பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திர நாள், தமிழ்க்கடவுள் எனப் போற்றப்படும்  முருகப் பெருமானுக்கு உகந்த தினம் ஆகும். அறுபடைவீடுகள் மட்டுமின்றி, எல்லா முருகப் பெருமான் ஆலயங்களிலும், பங்குனி உத்திர நாள் பெருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது.

அறுபடை வீடுகளில் ஒன்றான, திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 

வள்ளி - தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தின் முன்பு மத்தளம் உள்ளிட்ட வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து சூரியன், வளர்பிறை நிலவு, மயில், வேல், சேவல் மற்றும் பூஜைப் பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடி, பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க ஏற்றப்பட்டது. 

சாமி சப்பரத்தில் பட்டக்காரர் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவில், சன்னதி வீதி, கிரிவீதிகளில் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

20-ந்  தேதி மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 7.45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனி உத்திர தேரோட்டம்  21ம் தேதி நடக்க உள்ளது. பங்குனி உத்திர நாளின் முதலாம் நாளிலேயே பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.

இதே போல் இதர அறுபடைவீடுகள் முருகன் ஆலயங்களிலும் பங்குனி உத்திரப் பெருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

by Mani Bharathi   on 16 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள் பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்
திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்! திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்!
இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு! இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு!
தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்! தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்!
வேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்! வேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்!
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு! மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
சனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்! சனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.