நீண்ட இடைவெளிக்கு பிறகு, கரகாட்டக்காரன் புகழ் ராமராஜன் இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
'கரகாட்டக்காரன்', 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'பொங்கி வரும் காவேரி', 'தங்கமான ராசா' என்று பல வெற்றிப்படங்களில் நடித்தவர் ராமராஜன். கிராமத்துக் கதைகளுக்கேற்ற நாயகனாக ரசிகர்களின் மனதில் பதிந்த ராமராஜன், கடைசியாக நடித்த 'சீறி வரும் காளை,' 'மேதை' ஆகிய படங்கள் சரியாகப் ஓடவில்லை. இந்நிலையில் நடிகர் ராமராஜன், புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு கும்பாபிஷேகம் என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை வேல் பிலிம் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வே.ஜெயன் தயாரிக்கிறார். கதாநாயகியாக நூர்யா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப்படத்தை புஷ்பராஜ் என்பவர் எழுதி, இயக்குகிறார்.
|