LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- ஓசோ

வாழ்வை உணர்ந்து கொள்

 

ஒரு குடும்பத்தார் என்னை வரவேற்று இருந்தனர். மாலையில் அங்கே சென்று இப்போது தான் வீடு திரும்பினேன். ஒரு சுவையான நிகழ்ச்சி அங்கே நடைபெற்றது.
அந்த வீட்டில் நிறைய குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் எல்லாம் சேர்ந்து சீட்டுக்கட்டை எடுத்து ஒரு மாளிகையைத் தயாரித்தார்கள். எனக்கும் அதைக் காட்டினார்கள். அது மிகவும் அழகாக இருந்தது. நான் பாராட்டும் தெரிவித்தேன்.
குடும்பத் தலைவியானவர் கூறினார்: 'சீட்டுக் கட்டின் மாளிகைக்கும் பாராட்டா? ஒரு மெல்லிய காற்று வீசினாலும் சீட்டுகள் தரைமட்டமாகி விடுமே'
நான் சிரித்து விட்டேன். குழந்தைகள் என் சிரிப்புக்குக் காரணம் கேட்டனர். அதே விநாடி சீட்டு மாளிகை காற்றின் வீச்சால் சரிந்து விட்டது. அந்தக் குழந்தைகளின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. உடனே அந்த பெண்மணி கூறினார்: 'பார்த்தீர்களா? நான் அப்போதே சொன்னேனல்லவா? ' நான் அவரிடம் கூறினேன்: ' நான் மேலும் பல மாளிகைகளைக் கண்டிருக்கிறேன். எல்லாம் சரிபவைகளே!'
கற்களால் அமைக்கப்படும் மாளிகையும் சீட்டுக்கட்டைப் போன்ற மாளிகைகளே. குழந்தைகளின் மாளிகை மட்டுமல்ல, பெரியவர்களின் மாளிகையும் சீட்டுக்கட்டைப் போல சிதறுண்டு செல்பவையே. நாமெல்லோருமே மாளிகை கட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். கற்பனைகளில், கனவுகளின் மாளிகைகள், ஒரேயொரு மெல்லிய காற்று! எல்லாம் மண்ணோடு மண்ணாகி விடுகின்றன. இந்த அர்த்தத்தில் பார்த்தால் நாமெல்லோரும் குழந்தைகளே. ஒரு சிலரே முதிர்ச்சி அடைகின்றனர். இல்லையெனில் மற்ற எல்லோரும் குழந்தைகளாகவே மரித்து விடுகின்றனர்.
எல்லா மாளிகைகளுமே சீட்டுக்கட்டு மாளிகைகளே. இதனை அறிந்து கொண்டாலே போதும். மனிதன் முதிர்ச்சி அடைந்து விடுகிறான். இருப்பினும் அவன் மீண்டும் அதனைக்கட்டுவதில் முனையலாம். ஆனால் அவை அனைத்தும் நடிப்பாகும்.
நன்றி : ஓசோ - தமிழ் 

ஒரு குடும்பத்தார் என்னை வரவேற்று இருந்தனர். மாலையில் அங்கே சென்று இப்போது தான் வீடு திரும்பினேன். ஒரு சுவையான நிகழ்ச்சி அங்கே நடைபெற்றது.


அந்த வீட்டில் நிறைய குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் எல்லாம் சேர்ந்து சீட்டுக்கட்டை எடுத்து ஒரு மாளிகையைத் தயாரித்தார்கள். எனக்கும் அதைக் காட்டினார்கள். அது மிகவும் அழகாக இருந்தது. நான் பாராட்டும் தெரிவித்தேன்.


குடும்பத் தலைவியானவர் கூறினார்: 'சீட்டுக் கட்டின் மாளிகைக்கும் பாராட்டா? ஒரு மெல்லிய காற்று வீசினாலும் சீட்டுகள் தரைமட்டமாகி விடுமே'

நான் சிரித்து விட்டேன். குழந்தைகள் என் சிரிப்புக்குக் காரணம் கேட்டனர். அதே விநாடி சீட்டு மாளிகை காற்றின் வீச்சால் சரிந்து விட்டது. அந்தக் குழந்தைகளின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. உடனே அந்த பெண்மணி கூறினார்: 'பார்த்தீர்களா? நான் அப்போதே சொன்னேனல்லவா? ' நான் அவரிடம் கூறினேன்: ' நான் மேலும் பல மாளிகைகளைக் கண்டிருக்கிறேன். எல்லாம் சரிபவைகளே!'


கற்களால் அமைக்கப்படும் மாளிகையும் சீட்டுக்கட்டைப் போன்ற மாளிகைகளே. குழந்தைகளின் மாளிகை மட்டுமல்ல, பெரியவர்களின் மாளிகையும் சீட்டுக்கட்டைப் போல சிதறுண்டு செல்பவையே. நாமெல்லோருமே மாளிகை கட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். கற்பனைகளில், கனவுகளின் மாளிகைகள், ஒரேயொரு மெல்லிய காற்று! எல்லாம் மண்ணோடு மண்ணாகி விடுகின்றன. இந்த அர்த்தத்தில் பார்த்தால் நாமெல்லோரும் குழந்தைகளே. ஒரு சிலரே முதிர்ச்சி அடைகின்றனர். இல்லையெனில் மற்ற எல்லோரும் குழந்தைகளாகவே மரித்து விடுகின்றனர்.


எல்லா மாளிகைகளுமே சீட்டுக்கட்டு மாளிகைகளே. இதனை அறிந்து கொண்டாலே போதும். மனிதன் முதிர்ச்சி அடைந்து விடுகிறான். இருப்பினும் அவன் மீண்டும் அதனைக்கட்டுவதில் முனையலாம். ஆனால் அவை அனைத்தும் நடிப்பாகும்.


நன்றி : ஓசோ - தமிழ் 

 

by Swathi   on 20 Nov 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிந்தனையாளர் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி சிந்தனையாளர் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி
தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர். தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர்.
மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது
அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா?
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.
புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way) புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.