LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர்.

தனி மனித அமைதிக்கு உருவத்துள் உலவும் உயிரணு மனதில் அனுமானித்து அதன் அசைவும் ஓட்டமும் நிலையும் நம் உடலுள் காண முயல்வதே தியானம் தவம்..
தியானம் பழக பழக தன்னுள் உள்ள உயிர் அதிர்வு பிறவுயிர், பிற சடப் பொருள் என விரிந்து உணர உணர பிரபஞ்ச இயக்கம், நிலை, துவக்கம் வரை மனம் விரிந்து உணர்கிறது.
 
இந்த உணர்வே எல்லா இயக்கத்தின் மூலமான சுத்த வெளியில் மோதி அந்த சுத்த வெளியினுள் காணும் நுண் அதிர்வை தொடும் போது அண்டம் பிண்டம் அதனூடே நிகழும் சராசரங்களை ஒரே மனநிலையில் காணுவதே விஸ்வரூபம் எனும் துரியாதீதம் உச்சம்.  இங்கே மனம் தொட்டு விட்டால் தான்,தனது என்ற பேதம் நீங்கி எல்லாம் ஒன்றே, ஒன்றின் பல்வேறு தோற்றமே என்று மனம் நிறைவு பெறுகிறது. இந்த இடத்துக்குச் செல்லவே நம் மனது பசி தூக்கம் சுவை நகை நட்டு பகட்டு புகழ் பொருள் தேடல் என்று திசை மாறி அதைத் தேடித் தேடி நிறைவடைய முடியாமல் தடுமாறி எதைத் தேடியும், தேடியதைப் பெற்றும் திருப்தி இல்லாமல் வாழ்வே துன்பம் என்ற சலிப்பைத் தந்து விடுகிறது.
 
#துரியாதீதம் தொட்ட மனது ஆடம்பரங்களில் இருந்து விலகுகிறது. உடலியக்கத்திற்கு சிறு உணவு,உடல் சூடு பராமரிக்க நீர், நின்று உறங்க சிறிது நிலம்,உடல் மறைக்க உடை, இது போதும் என்று தன் தேவைகளை குறைத்து அமைதியாய் சலனமின்றி வாழப்பழகி விடுகிறது. #தன்னிறைவைப் பிறருக்குப் போதித்து இணைத்து விடும் இணைப்பே யோகம். இந்த யோகக் கல்வியை போதிக்கவே பல்வேறு வழிகளைத் தேடியே அனைத்து மதங்களும் தோன்றின. (நகர்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக தொக்கி நிற்கின்றன.)
 
மதக்கருத்து உணராமல் மதம் தோற்றுவித்தவனை வணங்க ஆரம்பித்து விடுகின்றன. பிற்காலங்கலில் தோற்றுவித்தவன் பக்குவ வாழ்விற்கு முன் வாழ்ந்த வாழ்வை விமர்சிக்கும் போலி நாத்திக கும்பலும் தோன்றி விடுவதும், அதனுள் மனிதன் மாட்டிக் கொள்கிறான் மனிதன். மதவெறி,இனவெறி தோன்றி விடுகிறது. இதை தவிர்த்து
எல்லையற்ற அளவில் விரிய வலுவுடைய மனதை சிறு சிலைக்குள் வழிபாடாகும் போது குறுகி நிற்க முடியாமல் பல சிலை வணக்கம் என கஷ்டத்திற்கு தகுந்தாற் போல் கடவுள் சிலைகளை மனிதன் மற்றிக் கொண்டே போகிறான்.  மனம் குறுகி ஒடுங்கினால் அணுவுள் உள்ள சுத்த வெளிக்குள் செல்வதும், விரிந்தால் அணுவைச் சுற்றியுள்ள சுத்தவெளியை உணர்கிறான். 
 
ஒடுக்கம் விரிவு இதுவே இயற்கை.  விதை சிறிது (ஒடுக்கம்)அதில் தோன்றிய விருட்சம் விரிவு.  விருட்சம் விதை உற்பத்திக்காக விரிந்து மீண்டும் பூத்து காய்த்து பல விதைகளில் ஒடுங்கி விடுகிறது... இதைச் சீர் செய்து கல்வியாகவே 18- வயதுக்குள் தரத் தக்க அளவில் குழந்தை வளர்ப்பு அமைய வேண்டும். இதுவே உலக அமைதிக்கும் தனி மனித அமைதிக்கும் ஏற்ற #கல்விக் கொள்கை. வேதாத்திரிய சாரத்தில்..
by Swathi   on 17 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது
அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா?
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.
புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way) புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள் அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்
இறையன்பும் சிந்தனை வளமும் இறையன்பும் சிந்தனை வளமும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.