சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 79 ரன்கள் குவித்து மும்பை அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.
ஹரியான - மும்பை அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை லீக் போட்டி, பன்சி லால் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது. ஹரியான அணி தனது முதல் இன்னிங்சில் 134 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து விளையாடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை எடுத்தது. இரண்டு ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஹரியானா அணி, 241 ரன்கள் குவித்தது ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 240 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணியில், வாசிம் ஜாபர் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ரகானே 40, பவார் 47, அபிஷேக் 24 ரன்கள் என அவுட் ஆனார்கள். இதன் பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய டெண்டுல்கர் அரை சதம் அடித்ததோடு மட்டுமல்லாமல் அணியின் வெற்றி இலக்கை எட்ட உதவினார். வெற்றி பெற்ற மும்பை அணியின் வீரர்கள் டெண்டுல்கரை தோளில் தூக்கி வைத்து மைதானத்தை வலம் வந்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
|