மருத்துவர், பொறியாளர், மேலாளர் மற்றும் பிரதிநிதிகள் ஆகிய பதவிகளில், சிங்கப்பூர் மக்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என சிங்கப்பூர் மனிதவளத் துறை அமைச்சர் டான் சுவான்–ஜின் (Tan Chuan-Jin) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, சிங்கப்பூர் நிறுவனங்கள், மருத்துவர், பொறியாளர், மேலாளர் மற்றும் பிரதிநிதிகள் போன்ற பதவிகளுக்கு, வெளிநாட்டினருக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக, சிங்கப்பூர் மக்கள் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து, இந்த பிரச்னைக்கு தீர்வுகாணும் விதமாக, இப்பதவிகள் தொடர்பான இலவச விளம்பரத்தை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், 14 நாட்களுக்கு முன் அரசுக்கு கொடுக்க வேண்டும். அதாவது, 25 பணியாளர்களைக் கொண்டுள்ள, ஒரு நிறுவனம், கட்டாயமாக இதுபோன்ற விளம்பரம் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், வெளிநாட்டினரை பணியில் அமர்த்திக் கொள்வதற்காக வழங்கப்படும் அனுமதி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மறுக்கப்படும் என டான் சுவான்–ஜின் தெரிவித்தார்
|