தமிழர்களின் அறம்சார் வணிகத்தின் இரண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் இவ்வாரம் கண்ணில் பட்டது. அதைப்பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. அதிலிருந்து திரட்டிய செய்தியை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.
இலக்கியவாதிகளா? வணிகர்களா? யார் முன்னிற்பது என்பது தொடர்ந்து உரையாடப்படும் தலைப்புதான். இலக்கிய ஆர்வமும் , மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்ட (Social Entrepreneurs) தமிழர்கள் வணிகத்தில் வெற்றிபெறும்போது அது தமிழுக்குப் பெருமைசேர்க்கும். அவர்கள் தன் அடையாளமான மொழியை, எழுத்தாளர்களை, இலக்கியத்தை கொண்டாடுவார்கள். நிலக்கோட்டை திரு.மு.வ.மா.ஜெயச்சந்திரன் மற்றும் கரூர் திரு க.செங்குட்டுவன் இருவரும் முன்மாதிரியானவர்கள்.
வலைத்தமிழில் இதை வரவேற்று செய்தியாக வெளியிட்டுள்ளது https://www.valaitamil.com/social-entrepreneur_20181.html
1) இலங்கை கொக்குவில் கிராமத்தில் பிறந்து தற்போது கனடாவில் வசித்து வரும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்ற பெயரில் நகரின் நகைக்கடை ஒன்று விற்பனை சலுகை ஒன்றை அறிவித்து இந்த விளம்பரத்தை செய்திருக்கிறது. திரைப் பிரபலங்களையும் கவர்ச்சி கன்னிகளையும் விடுத்து ஒரு தமிழ் எழுத்தாளரின் புகைப்படத்தை அதுவும் தமிழ்நாட்டின் சிறு நகரத்தில் ஒட்டியிருப்பது தமிழர்களின் அறம்சார் வணிகச் செயல்.
கடையின் உரிமையாளர் நண்பர் திரு. மு.வ.மா.ஜெயச்சந்திரன் அவர்கள் நல்ல இலக்கிய ஆர்வலர் மற்றும் தமிழ் பற்றாளரர். சென்ற வருடம் தமிழக தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அப்துல் கலாம் போன்ற தலைவர்களின் பிறந்த நாளன்று தனது நகைக்கடை வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவித்தார். இந்த வருடம் 12 மாதங்களில் பிறந்த 18 தமிழ் எழுத்தாளர்களின் பிறந்த நாட்களில் சலுகைகள் அறிவித்துள்ளார். இந்த புதிய முயற்சி உண்மையில் வணிகமும் இலக்கியமும் கைகோர்த்து பயணிப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. https://www.facebook.com/photo/?fbid=2307468806094283&set=a.1079960445511798
2) கரூர் திருக்குறள் ஆர்வலர், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் புரலவர் குழுவைச் சார்ந்த திரு. க.செங்குட்டுவன் கள்ளுண்ணாமை அதிகாரத்தின் குறள் -பொருள் சொல்பவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்துள்ளார். https://www.facebook.com/ValaiTamil/photos/a.405055886240491/5840018682744157/
|