LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் 18ம் தேதி வரை நடக்கிறது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர்  10- ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்   இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி, 21ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 10ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவத்தில் கொடியேற்றம் இல்லை. மர தேருக்கு பதில் தங்க ரதம் மற்றும் புஷ்ப பல்லக்கு நடைபெறும்.

9ம் தேதி இரவு 7 மணிக்கு அங்குரார்ப்பணம், 10ம்தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 8 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

11ம்தேதி காலை சின்ன சேஷ வாகனத்திலும் இரவு ஹம்ச (அன்ன) வாகனத்திலும், 12ம் தேதி காலை சிம்ம வாகனத்திலும்,  இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 13ம் தேதி காலை கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 

14ம் தேதி காலை பல்லக்கில் மோகினி அலங்காரத்தில் வீதிஉலா வரும் மலையப்ப சுவாமி அன்றிரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. 

15ம் தேதி காலை மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்திலும், மாலை புஷ்ப பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு கஜ வாகனத்திலும், 16ம் தேதி காலை 9 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும் இரவு 8 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் வருகிறார்.

17ம் தேதி காலை 7 மணிக்கு தங்கத் தேரோட்டம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் வருகிறார்.  18ம் தேதி காலை 6 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
பிரம்மோற்சவத்தையொட்டி கோயிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

by Mani Bharathi   on 09 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள் பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்
திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்! திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்!
இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு! இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.