|
|||||
உத்தரப்பிரதேச கும்பமேளா: தை அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்! |
|||||
உத்தரப் பிரதேச கும்பமேளாவில் தை அமாவாசை நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள். தினந்தோறும் கும்பமேளாவில் நீராடினாலும், விசேஷ நாட்களில் நீராடுவதை பக்தர்கள் மேலும் புனிதமாக கருதுகின்றனர். மகரசங்ராந்தியன்று, அதாவது பொங்கல் தினத்தன்று பக்தர்கள் முதல் புனித நீராடலை கடைப்பிடித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது புனித நீராடல் நடந்தது. தை அமாவாசையை வட மாநிலத்தை சேர்ந்தவர் மவுனி அமாவாசை என்ற பெயரில் கடைபிடிக்கின்றனர். இந்த நாட்களில் பேசாமல் அமைதியாக இருப்பதையும் பக்தர்கள் கடைபிடிக்கின்றனர். மவுனி அமாவாைசயை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள். இதற்காக அதிகாலை 3 மணி முதலே பக்தர்களின் வருகை தொடங்கியது. கடும் பனியையும் பொருட்படுத்தாது, பக்தர்கள் புனித நீராடுவதற்காக திரண்டபடி இருந்தனர். சுமார் 3 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 40 காவல்நிலையத்தை சேர்ந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கும்பமேளா பகுதி முழுவதும் 440 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி புனித நீராடல் வருகிற 10ம் தேதி பசந்த் பஞ்சமி அன்று நடக்கின்றது. மார்ச் 4ம் வரை சுமார் 12 கோடி பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. |
|||||
by Mani Bharathi on 06 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|