நடிகர் விக்ரம் பிரபு, தற்போது, அரிமா நம்பி, சிகரம் தொடு, உஸ்தாக் ஹோட்டல் படத்தின் ரீமேக் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த படங்களை தொடர்ந்து, அடுத்ததாக, எழில் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். வெள்ளக்கார துரை என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார்.
இந்த படத்தின் கதை முற்றிலும் கிராமத்து நகைச்சுவையை மையமாக கொண்டதாம். கிராமங்களில் கொஞ்சம் வெள்ளையும், சொள்ளையுமாக திரியும் இளைஞர்களை முதியவர்கள் செல்லமாக வெள்ளக்கார துரையினு. அதையே படத்துக்கும் பெயராய் வைத்திருக்கிறார் எழில். விரைவில் வெள்ளக்கார துரை படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
|