|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-17-10-2015 |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர் : A.முகமது, S/o.அப்பாஸ் பிறந்த தேதி : 13.10.1988, பிறந்த நேரம் : காலை மணி 6.25, பிறந்த இடம் : மதுரை
நான் I.A.S தேர்வுக்கு படித்து வருகிறேன். I.A.S ல் தேர்வு பெறுவேனா? அரசு வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையுமா? திருமணம் எப்பொழுது? குழந்தை பாக்யம் உண்டா? சொந்த வீடு, வண்டி வாகனங்கள் அமையுமா?
துலா லக்னம் துலாராசி விசாக நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு தற்பொழுது சனி தசையில் சந்திர புத்தி 17.10.2017 வரை நடப்பில் உள்ளது. சனி உங்கள் லக்னத்திற்கு 4,5 க்குடையவராகி அவர் 3ம் இடத்தில் அமர்ந்து அவர் கேது சாரம் பெற்று கேது 11ம் இடத்தில் அமர்வது தங்களுக்கு இந்த சனி தசையில் I.A.S பாஸ் ஆவதற்கு வாய்ப்பும் அமையும். தற்பொழுது சந்திர புத்தி நடப்பில் உள்ளது. இந்தச் சந்திரன் உங்கள் லக்னத்திற்கு 10ம் அதிபதியாக அவர் லக்னத்தில் அமர்ந்து அவர் 3,6 க்குடைய குரு சாரம் பெற்று அந்தக் குரு 8ம் இடத்தில் அமர்வது உங்கள் I.A.S படிப்பில் சற்று தடையேற்பட்டு அதாவது பேப்பர் எழுதுவதில் தடையேற்பட்டு அல்லது பாஸ் ஆவதில் தடையேற்பட்டு மறுபடியும் எழுதி பாஸ் ஆவீர்கள். குரு தான் நிர்வாகத் தன்மையைக் (ADMIN) குறிப்பிடுபவர் ஆவார்.
உங்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். சந்திர புத்தி முடிந்து செவ்வாய் புத்தியில் உங்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் உங்கள் லக்னத்திற்கு 6ம் இடத்தில் அமர்ந்து அவர் 4,5க்குடைய சனி சாரம் பெற்று சனி 3ம் இடத்தில் அமர்வதால் வேலை கிடைக்கும். 3ம் இடம் என்பது இண்டர்வியு அட்டெண்ட் செய்வதையும் 6ம் இடம் என்பது வேலையையும் செவ்வாய் என்பது மத்திய அரசையும் குறிக்கும். திருமணம் செவ்வாய் புத்தியில் நடக்கும். முதலில் வேலை பின் திருமணம் அமையும். நன்கு படித்த வேலை பார்க்கும் பெண் அமைவாள். அந்நியத்தில் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்யம் உண்டு. வீடு கட்ட வாய்ப்பு அமையும். பின்னாளில் வெளிநாடு சென்று திரும்புவீர்கள்.
பெயர் P.சேது, S/o.பிச்சை, பிறந்த தேதி 17-09-1973, பிறந்த நேரம் இரவு மணி 10.59, பிறந்த இடம் கரூர், சூரிய தசை இருப்பு 1 வருடம் 10 மாதம் 11 தேதி
எனது பலசரக்கு சுய தொழில் லாபகரமாக இருக்குமா? வேறு தொழில் செய்யலமா? மணவாழ்வு சுமாராக உள்ளது? எப்படி இருக்கும் எனது மணவாழ்வு? தார தோஷம் உண்டா? பொருளாதாரத்தில் உயர்நிலை அடைவேனா? வீடு வாங்குவேனா?
ரிஷப லக்னம், ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு தற்பொழுது குரு தசையில் புதன் புத்தி 4-7-2017 வரை நடப்பில் உள்ளது. குரு உங்கள் லக்னத்திற்கு 8, 11 க்குடையவராகி அவர் 9ல் அமர்ந்து அவர் 4க்குடைய சூரியன் சாரம் பெற்று அந்தச் சூரியன் 5ல் அமர்வது உங்களது பலசரக்கு சுயதொழில் சுமாராக இருக்கும் என்பதையே காட்டுகிறது. 9ம் இடம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் பண்ணுவதையும் பார்க்கும் தொழிலை விட்டுவிட்டு ஊரை விட்டு வெளியேறுவதையும் குறிக்கும். 4ம் இடம் என்பது தொழில் தகராறு தொழில் நிச்சயமற்ற தன்மையையும் குறிக்கும். 5ம் இடம் என்பது உங்கள் பணம் பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்வதையும் அல்லது மாட்டிக் கொள்வதையும் குறிக்கும். அவை வராத கடன் என்று சொல்ல முடியாவிட்டாலும் எப்பொழுது வரும் என்பதையும் குறிப்பிட முடியாது. எனவே தாங்கள் பெரிய அளவில் கடன் கொடுக்க கூடாது.
எனவே பலசரக்கு தொழில் பெரிய லாபம் இராது. அதே சமயம் அந்தக் தொழிலை விட்டுத் தாங்கள் வெளியே வரவும் முடியாது. காரணம் 4ம் இடம் என்பது பலசரக்கு கடையையும் வீட்டு உபயோகப் பொருட்களையும் குறிப்பிடுவதால் அத் தொழிலை விட்டு தாங்கள் வெளியே வரவும் முடியாது. மணவாழ்க்கையைப் பொறுத்த வரையில் 7,12 க்குடைய செவ்வாய் 12ல் அமர்ந்து அவர் சுக்ரன் சாரம் பெற்று சுக்ரன் 6ம் இடத்தில் அமர்வது தாங்கள் திருமணம் ஆனாலும் அடிக்கடி மனைவியை விட்டுப் பிரிய நேரிடும். தங்களுக்குத் தாரதோஷம் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். பின்னாளில் வீடு வாங்க யோகம் உண்டு.
R.மகாலஷ்மி W/o.ராமமூர்த்தி, பிறந்த தேதி 29/30.05.1963, பிறந்த நேரம் காலை மணி 2.02, பிறந்த இடம் : வேலூர், கேது மஹா தசையில் செல் நீக்கி இருப்பு 1-5-3
எனது மனைவியின் உடல்நிலை எப்படி இருக்கும்? ஆப்ரேஷன் ஏதேனும் செய்ய வேண்டி வருமா? ஆயுள் எவ்வளவு எனது மனைவி ஜாதகப்படி என்னுடைய அரசு வேலை, உடல் ஆரோக்யம் எப்படி இருக்கும்? குழந்தைகளால் நன்மையுண்டா?
ஒருவருடைய ஆயுளைப் பற்றிய விவரம் படைத்த பிரம்மதேவனுக்கு மட்டுமே தெரிந்த பிரம்ம ரகசியம் ஆகும். பிரம்மாவிற்கு மட்டுமே ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலத்திற்கு என்பதும். அந்த ஆன்மாவின் பிறப்பு இறப்பு விவரங்களை சித்திர குப்தனால் மட்டுமே கணக்கிட முடியும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இருப்பினும் ஜோதிட சாஸ்த்திரத்தில் ஏதேனும் ஜாதகத்தில் கண்டங்கள் தோஷங்கள் இருந்தால் குறிப்பிடுவது மட்டுமே ஜோதிடரின் வேலையாகும்.
மீன லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் மனைவிக்கு தற்பொழுது ராகு தசையில் சனி புத்தி 9-11-2015 வரை நடப்பில் உள்ளது. ராகு உங்கள் மனைவி ஜாதகப்படி லக்னத்திற்கு 3ல் அமர்ந்து அவர் 1, 10க்குடைய குரு சாரம் பெறுவதால் தசாநாதன் வலுவாக இருப்பதால் தற்பொழுது ஆயுளைப் பற்றி கவலை இல்லை.
சனி புத்தி முடிந்து புதன் புத்தியிலும் மனைவிக்கு உடல் ஆரோக்யக் குறைவு என்பது உண்டு. அடிக்கடி வைத்யச் செலவுகள் ஏற்படும். அதனால் உயிருக்கு கண்டங்கள் என்று எதுவும் ஏற்படாது. பயப்பட வேண்டாம். இருப்பினும் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். மனைவியின் ஜாதகப்படி உங்களுடைய வேலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஏனெனில் எப்பொழுதும் போல் ரிடையர்மெண்ட் ஆக வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்யம் நன்கு அமையும். குழந்தைகளால் உங்கள் இருவருக்கும் நன்மைகளே நடைபெறும். கவலை வேண்டாம், வருடம் ஒருமுறை “ஆயுஷ் ஹோமம்” அல்லது மிருத்துஞ்சய ஹோமம் செய்ய உத்தமம்.
பெயர் V.ப்ரியா, D/o.வெங்கடேஷ் பிறந்த தேதி : 18-03-2001, பிறந்த நேரம் காலை மணி 11.57, பிறந்த இடம் சேலம், சுக்ர தசை இருப்பு 10-10-22
எனது மகளுக்கு தோல் சம்பந்தமான வியாதி உண்டு டாக்டரிடம் காண்பித்தபொழுது கோடியில் ஒருவருக்கு மட்டுமே இந்த மாதிரி நோய் இருக்கும் என்று கூறிவிட்டார்கள். படுத்து எழுந்தால் தோல் உரிந்து கொண்டே இருக்கும்? என் புதல்விக்கு ஆயுள் தீர்க்கம் உண்டா? அவளுக்கு திருமணம் உண்டா? குழந்தை பாக்யம் உண்டா? எதனால் இவ்வியாதி ஏற்பட்டது என்பதைக் குறிப்பிடவும்?
உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு வலுவான புத்ர தோஷம் இருக்கும். அதையொட்டித்தான் உங்கள் மனைவி ஜாதகமும் அமையும். உங்கள் இருவரது ஜாதகத்தில் உள்ள புத்ர தோஷத்தின் விளைவே உங்கள் புதல்வியாகும். போன ஜென்மத்தில் நாம் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப இச் ஜென்மத்தில் நாம் பலன்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. எனவே நம் ஜாதகத்தின் வாயிலாக அப் பலன்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. எனவே நம் ஜாதகத்தின் பலனே நம் புத்திரர்கள் என்பதை மறக்கக்கூடாது. உங்கள் ஜாதகத்தை நன்கு பார்த்து சரியான பரிகாரங்களை செய்து இருக்க வேண்டும்.
தற்பொழுது உங்கள் புதல்விக்கு மிதுன லக்னத்தில் லக்னத்திலேயே ராகு அமர்ந்து அவர் தன்னுடைய சாரத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பானதல்ல. ராகு தோல் மற்றும் உடலில் இனம் காண முடியாத நோய்களைக் குறிப்பிடுபவர் ஆவார். மேலும் ராகு ஒரு நிழல் கிரகம் ஆகும். அவர் எக்ஸ்ரே, இசிஜி, எம்.ஆர்.ஐ, இவை எவற்றுக்கும் கட்டுப்படாதவர் ஆவார். எனவே தாங்கள் ஆரம்பத்தில் தங்கள் புதல்விக்கு என்ன நோய் எப்படி உருவானது என்ற விவரங்களை மருத்துவர்களால் அறிய முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் புதல்விக்கு பூர்வ ஜென்ம தோஷங்கள் நிறைய உள்ளது. அத்துடன் மாந்திக்கும் முறையான பரிகாரம் பண்ணினால் மட்டுமே நல்ல ஆயுள், நல்ல கணவன், நல்ல குடும்பம், நல்ல குழந்தைகள் அமைய வாய்ப்புண்டு. தெய்வங்களைக் காட்டிலும் சித்தர்கள், மகான்களால் மட்டுமே உங்கள் புதல்வியின் நோயை நல்வழிப்படுத்த இயலும்.
- ஜோதிட இமயம் அபிராமி சேகர் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
by Swathi on 19 Oct 2015 23 Comments | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Tags: ஜோதிட இமயம் அபிராமி சேகர் ஜோதிட கேள்வி பதில்கள் கேள்வி பதில்கள் ஜாதகம் ஜாதக கேள்வி பதில்கள் Astrology Questions in Tamil | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|